மத்திய பட்ஜெட் ... எந்தெந்த துறைகளில் என்ன அறிவிப்பு... முக்கிய அம்சங்கள்... இதை படிங்க!
டெல்லி: மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-
சுகாதாரத்துறை
- ரூ.64,180 கோடியில் பிரதமரின் சுயசார்பு ஆரோக்கிய திட்டம் தொடங்கப்படும்
- கொரோனா தடுப்பூசிக்கு ரூ.35,000 கோடி ஒதுக்கீடு
- இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை தொடங்கப்படும்
- கொரோனா பரவலை தடுக்க ஜிடிபியில் 13% நிதி ஒதுக்கீடு
- கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் சுகாதார துறைக்கு 137% கூடுதல் நிதி ஒதுக்கீடு
- ரூ.1.41 லட்சம் கோடி செலவில் நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்படும்
- நாடு முழுவதும் ஊட்டச்சத்து மேம்படுத்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
- 116 மாவட்டங்களில் இரண்டாம் ஊட்டச்சத்து இயக்கம் செயல்படுத்தப்படும்.
வருமான வரித்துறை
- வருமான வரி அடுக்கு விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
- 5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த தேவையில்லை.
- கார்ப்பரேட் வரிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை
- 75 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு வருமான வரி கணக்கு தாக்கல் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது
- வரி ஏய்ப்பு செய்பவர்களை கண்டுபிடிக்க நவீன தொழில் நுட்ப வசதி பயன்படுத்தப்படும்
- குறைந்த விலை வீடுகள் கட்டும் திட்டங்களுக்கு 2022-ம் ஆண்டு வரை வரிச்சலுகை வழங்கப்படும்
- பங்குச்சந்தைகளை ஒழுங்குப்படுத்த ஒருங்கிணைந்த புதிய சட்டம் உருவாக்கப்படும்
சாலை மேம்பாட்டு திட்டங்கள்
- 2022-ம் ஆண்டுக்குள் 8,500 கி.மீ நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்.
- 11,000 கி.மீ தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் செயல்படுத்தப்படும்
- தமிழகத்தில் ரூ 1.03 லட்சம் கோடியில் சாலை மேம்பாட்டு திட்டங்கள் அமைக்கப்படும்.
- தமிழ்நாட்டில் 3,500 கி.மீ நீளத்துக்கு புதிய சாலைகள் அமைக்கப்படும்.
- கன்னியாகுமரி - கேரளா பல பகுதிகளை இணைக்க நவீன வசதிகளுடன் கூடிய புதிய சாலை
ரெயில்வே துறை
- ரெயில்வே துறைக்கு ரூ1.15 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
- சென்னை 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ63,246 கோடி நிதி ஒதுக்கீடு செய்யபப்டும்.
- சென்னையில் 118 கி.மீ தொலைவுக்கு 2-ம் கட்ட மெட்ரோ திட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்
- ரெயில்வே துறையில் சிறப்பு வழித்தடங்கள் உருவாக்கப்படும்
- மும்பை - குமரி இடையே புதிய வழித்தடம் அமைக்க திட்டம்
- பிரத்யேக சரக்கு ரயில் பாதை திட்டங்கள் அடுத்தாண்டு ஜூன்22ல் முடிவடையும்
- 27 நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்
வேலைவாய்ப்பு தொழில்கள் துறை
- சிறு, குறு தொழில்கள் வளர்ச்சிக்கு ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
- அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்படும்
- பெண்கள் இரவு நேர பணியை போதிய பாதுகாப்புடன் மேற்கொள்ள தகுந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும்
- புலம்பெயர்ந்த மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் பற்றிய தகவல்களை சேகரிக்க தனி இணையதளம் உருவாக்கப்படும்
- புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மலிவான வாடகையில் வீடுகள் கட்டி கொடுக்கப்படும்
- 3 ஆண்டுகளில் 7 ஜவுளிப்பூங்காக்கள் துவங்கப்படும்.
கல்வித்துறை
- நாடு முழுவதும் 100 புதிய சைனிக் பள்ளிகள் உருவாக்கப்படும்.
- நாடு முழுவதும் 15,000 பள்ளிகள் தரம் மேம்படுத்தப்படும்
- தேசிய மொழிகளை மொழிபெயர்ர்க்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும்
- லடாக்கில் உள்ள லே பகுதியில் மத்திய பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.
- 750 ஏகலைவா மாதிரி பள்ளிகள் நாடு முழுவதும் அமைக்கப்படும்
- 6 ஆண்டுகளில் ஆதிதிராவிட மாணவ-மாணவியருக்கு உதவ ரூ35,219 கோடி ஒதுக்கீடு
பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.2.5, டீசல் மீது ரூ.4 'செஸ்' போட்ட அரசு.. விண்ணை தொடப்போகிறது விலை
விவசாயிகள், வேளாண்மை
- நடப்பாண்டில் ரூ.1.72 லட்சம் கோடி மதிப்பில் விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்படும்
- சாலையோர வியாபாரிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டம் விரிவுபடுத்தப்படும்
- விவசாயிகளுக்கு கடன் வழங்குவதை அதிகப்படுத்த ரூ16.5 லட்சம் கோடி ஒதுக்கீடு
- வேளாண் பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதாரவிலை தொடரும்.
- நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதாரவிலை இரட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
- வேளாண் பொருட்களை சந்தைப்படுத்தும் திட்டத்தில் 1.68 லட்சம் கோடி பேர் பதிவு; 1,000 மண்டிகள் இணைப்பு
நிதிப்பற்றாக்குறை
- நாட்டின் நிதிப்பற்றாக்குறை 9.50 சதவீதம் என கணிப்பு
- அடுத்த நிதியாண்டில் அரசின் நிதிப்பற்றாக்குறை 6.8 சதவீதமாக குறையும்
- அடுத்த நிதியாண்டில் அரசின் செலவு ரூ.34.50 லட்சம் கோடியாக உயரும்
- சந்தைகளில் இருந்து ரூ.12 லட்சம் கோடி கடன் பெற இலக்கு
- தங்கத்திற்கு இறக்குமதி வரி 12.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைப்பு
- மின்னணு பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க ரூ.1,500 கோடி ஓதுக்கீடு
- டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி மேற்கொள்ள ரூ 9,768 கோடி ஒதுக்கீடு
மின்சாரம், குடிநீர்
- குழாய் மூலம் எரிவாயு வழங்கும் திட்டம் 100 நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும்
- மின்நுகர்வோர் தாம் விரும்பும் நிறுவனங்களிடம் இருந்தும் மின்சாரத்தை பெற புதிய திட்டம் ஏற்படுத்தப்படும்
- மின் விநியோகத்தில் தனியார் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்
- நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு குடிநீர் திட்டங்களுக்காக ரூ2.87 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
- கூடுதலாக 1 கோடி பேருக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும்.
- அடுத்த 3 ஆண்டுகளில் 100 மாவட்டங்களில் குழாய் மூலம் எரிவாயு விநியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்
பொதுத்துறை
- காப்பீட்டுத் துறையில் நேரடி அன்னிய முதலீடு 49%-ல் இருந்து 74% ஆக உயர்த்தப்பட்டது
- எல்.ஐ.சி பங்குகளை விற்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
- பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா பங்குகளை விற்க நடவடிக்கை
- 2 பொதுத்துறை, ஒரு காப்பீடு நிறுவனத்தின் பங்குகள் விற்பனை செய்யப்படும்
- பொதுத்துறை பங்குகளை விற்பதன் மூலம் ரூ.1.75 லட்சம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயம்
- அரசு வங்கிகளுக்கு பட்ஜெட்டில் கூடுதல் முதலீடாக ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
- வங்கி டெபாசிட் காப்பீடு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் ஆக அதிகரிப்பு
- தங்கத்துக்கான இறக்குமதி வரி 12.5%லிருந்து 10% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
- மேலும் சில விமான நிலையங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்படும்
- மாநிலங்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பது குறித்து முடிவெடுக்கலாம்
கடல் வர்த்தகத் துறை
- தமிழகத்தில் ஒருங்கிணைந்த பல்நோக்கு கடல் பூங்கா அமைக்கப்படும்
- சென்னை, கொச்சி உள்ளிட்ட 5 மீன்பிடித் துறைமுகங்கள் மேம்படுத்தப்படும்
- வர்ததக நோக்கிலான கப்பல் போக்குவரத்து என்ற புதிய திட்டம் தொடங்கப்படும்
- அடுத்த 5 ஆண்டுகளில் வர்ததக நோக்கிலான கப்பல் போக்குவரத்து திட்டத்திற்காக ரூ1,624 கோடி ஒதுக்கீடு
- ஆழ்கடல் ஆய்வுகளுக்கு, பல்லுயிர் பெருக்கத்தை காப்பாற்ற ஆழ்கடல் ஆய்வு அமைப்பு உருவாக்கப்படும்
Comments
English summary
Union Finance Minister Nirmala Sitharaman today presented the Union Budget for 2021-22. Additional emphasis has been given to the health sector in this budget