இந்திய சீன எல்லையில்.. முக்கிய பகுதியிலிருந்து திரும்பப் பெறப்படும் படைகள்.. திடீர் திருப்பம் எப்படி
டெல்லி: இந்தியா சீன எல்லை சிக்கலைத் தீர்ப்பதில் குறிப்பிடத்தக்க வெற்றியாகக் கிழக்கு லடாக்கின் கோக்ரா ஹைட்ஸ் பகுதியில் இருந்து தங்கள் படைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ள இரு நாட்டு ராணுவமும் ஒப்புக்கொண்டுள்ளன.
எல்லைப் பகுதிகளில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே மோதல் போக்கே நிலவி வருகிறது.
அதிலும் குறிப்பாக கல்வான் மோதலுக்குப் பிறகு எல்லையில் நிலைமை மேலும் மோசமாகிவிட்டது. இந்தியாவும் சீனாவும் எல்லையில் அதிகப்படியான வீரர்கள் குவித்து வருகின்றனர்.

12ஆம் கட்ட பேச்சுவார்த்தை
இதனால், எல்லையில் மிகவும் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. எல்லையில் மீண்டும் அமைதியைக் கொண்டு வர இரு நாட்டு ராணுவமும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதன்படி கடந்த சனிக்கிழமை (ஜூலை 31) இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் 12ஆம் கட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர். சுமார் 9 மணி நேரம் வரை நடந்த இந்த மீட்டிங்கில் பல முக்கிய விஷயங்கள் விவதாகிகப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கோக்ரா ஹைட்ஸ்
இந்தச் சூழலில் இரு நாட்டு எல்லையில் மிகவும் முக்கியமான பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படும் கோக்ரா ஹைட்ஸ் பகுதியில் இருந்து தங்கள் படைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ள இரு நாட்டு ராணுவமும் ஒப்புக் கொண்டுள்ளன. கடந்த சனிக்கிழமை (ஜூலை 31) நடைபெற்ற 12ஆம் கட்ட பேச்சுவார்த்தையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக்க உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எல்லையில் மீண்டும் அமைதி திரும்புவதில் இந்த நடவடிக்கை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

முக்கிய முடிவு
ஏனென்றால் இதற்கு முன், வீரர்களைத் திரும்பப் பெறும் நடவடிக்கை சுமார் 6 மாதங்களுக்கு முன்னர் தான் நடந்தது. அப்போது பாங்கோங் ஏரியில் இருந்த படைகளை இரு நாட்டு ராணுவங்களும் விலக்கிக் கொண்டன. அப்போதிலிருந்தே கோக்ரா ஹைட்ஸில் இருந்து வீரர்களைத் திரும்பப் பெறுவது தொடர்பாக இரு நாட்டு ராணுவமும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதில் உடன்பாடு ஏற்படாமல் இழுபறியிலேயே இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆலோசனை தீவிரம்
கடந்த ஜூலை 31ஆம் தேதி நடந்த மீட்டிங்கில் இந்தியா-சீனா எல்லையில் மேற்கு பகுதிகளில் இருக்கும் வீரர்களை விலகிக்கொள்வது தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த மீட்டிங் தொடர்பாக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "தற்போதுள்ள ஒப்பந்தங்களுக்கு ஏற்ப மீதமுள்ள இடங்களில் பிரச்சினைகளை விரைவாகத் தீர்க்கவும், தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்தவும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. இடைப்பட்ட காலத்தில் எல்லையில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யவும் மேற்கு பகுதிகளில் அமைதியைக் கூட்டாகப் பராமரிக்கவும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டன" என்றார்.

கல்வான் மோதல் வீடியோ
முன்னதாக, கடந்த ஆண்டு கல்வான் பகுதியில் ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ சீன ஊடகங்களில் வெளியாகியிருந்தது. அதில் ராணுவ கூடாரம் ஒன்றைச் சிலர் நீக்க முயல்வதும் அப்போது சீன ராணுவத்தினர் அவர்களுடன் மோதுவதும் பதிவாகியுள்ளது. கல்வான் நதி அருகே இந்தியா ராணுவத்தை நோக்கி கற்களை வீசுவது போலவும் அந்த வீடியோவில் உள்ளது. மேலும், காயமடைந்த வீரர்களைக் குளிர்ச்சியான நீர் நிறைந்த கல்வான் நதியில் சீன ராணுவம் சிரமப்பட்டுத் தூக்கிச் செல்வது போன்ற காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளன.
-
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு












Click it and Unblock the Notifications