லோக்சபா தேர்தல்: ம.பி, அசாமில் தட்டி தூக்கும் பாஜக.. 25-27 சீட்டுகள் கிடைக்குமாம்.. டைம்ஸ் நவ் சர்வே
டெல்லி: லோக்சபா தேர்தலில் மத்திய பிரதேசத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று டைம்ஸ் நவ் சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியிருப்பதால் தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கிவிட்டது. மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒரணியில் திரண்டுள்ளன. காங்கிரஸ், திமுக, ஐக்கிய ஜனதா தளம், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சிகள் இணைந்து "இந்தியா" என்ற கூட்டணியை அமைத்துள்ளன. பாஜகவை ஒரே அணியாக நின்று வீழ்த்தும் திட்டத்துடன் இந்தியா கூட்டணி திட்டம் வகுத்துள்ளது.

இதனால், வரும் லோக்சபா தேர்தல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மத்திய பிரதேசத்தில் வரும் லோக்சபா தேர்தலிலும் என்.டி.ஏ கூட்டணிக்கே அதிக இடங்கள் கிடைக்கும் என்று Times Now- ETG Research கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
மத்திய பிரதேசம்: மொத்த இடங்கள்: 29
பாஜக கூட்டணி : 25-27
இந்தியா கூட்டணி : 2-4
இதர கட்சிகள்: 0
அதேபோல், வடக்கிழக்கு மாநிலமான அசாமிலும் பாஜக கூட்டணிக்கே இந்தியா கூட்டணியை விட அதிக இடங்கள் கிடைக்கும் என்று டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
அஸ்ஸாம்: மொத்த இடங்கள்: 14
பாஜக கூட்டணி : 7-9
இந்தியா கூட்டணி : 4-6
இதர கட்சிகள்: 0
இதே போல காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வரும் சத்தீஷ்கரிலும் தேசிய ஜனநாயாக கூட்டணிக்கே அதிக இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறியுள்ளன.
சத்தீஸ்கர்: மொத்த இடங்கள் - 11
பாஜக கூட்டணி - 07-09
இந்தியா கூட்டணி (I.N.D.I.A) - 02-04
இதர கட்சிகள்: 0












Click it and Unblock the Notifications