புதிய ஐடி விதிகளை பின்பற்ற அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம்.. டிவிட்டர் அறிவிப்பு!
டெல்லி: மத்திய அரசின் புதிய ஐடி விதிகளை பின்பற்ற அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம், இது தொடர்பாக சில இந்திய அதிகாரிகளை நியமித்து உள்ளோம், என்று டிவிட்டர் நிறுவனம் மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் மத்திய தகவல்கள் தொழில்நுட்ப துறை மூலம் சமூக வலைத்தளங்களுக்கும், ஓடிடி தளங்களுக்கும் புதிய ஐடி விதிகள் கொண்டு வரப்பட்டன. அதன்படி இந்த சமூக வலைத்தளம் மற்றும் ஓடிடி தளங்கள் தங்களிடம் வரும் புகார்களை விசாரிப்பதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும்.
அரசு வைக்கும் புகார்களை இந்த அதிகாரிதான் விசாரிக்க வேண்டும். இன்னும் சில விதிகள் இதேபோல் விதிக்கப்பட்டு இருந்தன. இந்த விதிகளை பின்பற்ற கடந்த மாதம் வரை அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது. இதை டிவிட்டர் நிறுவனம் இதுவரை அதிகாரபூர்வமாக ஏற்கவில்லை.

டிவிட்டர்
இந்த நிலையில் மத்திய அரசின் புதிய ஐடி விதிகளை பின்பற்ற அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம், இது தொடர்பாக சில இந்திய அதிகாரிகளை நியமித்து உள்ளோம் என்று டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில், இந்த விதிகளின் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்து கொள்கிறோம். எங்களின் நிலைப்பாடு தொடர்பாக மத்திய அரசுக்கு விரைவில் தகவல் தெரிவிப்போம்.

ஒரு வாரம்
விரைவில் அல்லது ஒரு வாரத்திற்குள் நாங்கள் இது தொடர்பாக எங்களின் நிலைப்பாட்டை தெரிவிப்போம். இந்தியாவுடன் நாங்கள் ஆழ்ந்த பிணைப்பை கொண்டு இருக்கிறோம். இது தொடர்பாக ஆக்கபூர்வமான விவாதங்களை மேற்கொள்ள நாங்கள் விரும்புகிறோம். இந்த விதிகளை பின்பற்று முயற்சி செய்கிறோம்.
Recommended Video

பகிர்ந்து உள்ளோம்
எங்களின் நிலைப்பாடு குறித்து இந்திய அரசுக்கு நாங்கள் தொடர்ந்து தகவல்களை அறிவித்து இருக்கிறோம். இது தொடர்பாக ஆக்கபூர்வமான பேச்சுக்களை அரசுடன் செய்ய விரும்புகிறோம். ஏற்கனவே நோடல் தொடர்பு அதிகாரி (Nodal Contact Person), குடியுரிமை குறை தீர்க்கும் அலுவலகம் (Resident Grievance Officer) ஆகியோரை நியமனம் செய்து இருக்கிறோம்.

யார்
தலைமை இணக்க அலுவலர் (Chief Compliance Officer) ஒருவரை மட்டும் நியமிக்க வேண்டும். அவருக்கான தேர்வு நடந்து கொண்டு இருக்கிறது. கொரோனா காலம் என்பதால் இவரை நியமிப்பதில் சிக்கல் உள்ளது. இதனால் விதிகளை முழுமையாக பின்பற்ற கொஞ்சம் தாமதம் ஆகிறது. ஒரு வாரத்திற்குள் நாங்கள் இது தொடர்பாக எங்களின் நிலைப்பாட்டை தெரிவிப்போம், என்று டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications