பறக்கும் மனிதர் மில்கா சிங்கின்... மனைவி நிர்மல் கவுர் கொரோனா தொற்றால் காலமானார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனா வைரஸ் காரணமாக 'இந்தியாவின் பறக்கும் மனிதர்' என்று அழைக்கப்படும் பிரபல தடகள வீரர் மில்கா சிங்கின் மனைவி நிர்மல் கவுர் உயிரிழந்தார்.

கொரோனா 2ஆம் அலையில் இந்தியாவில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்து வருகிறது. முதல் அலையைக் காட்டிலும் 2ஆம் அலையில் பாதிப்பும், உயிரிழப்பும் மிக அதிகமாக உள்ளது.

Milkha Singhs Wife Dies from Covid-19, Legendary Athlete Still in ICU

இந்நிலையில், 'இந்தியாவின் பறக்கும் மனிதர்' என்று அழைக்கப்படும் தடகள வீரர் மில்கா சிங்கிற்கும் அவரது மனைவிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

மில்கா சிங்கின் மனைவி நிர்மல் கவுர்(85) FORTIS மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனிற்றி அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். கொரோனா வைரசுக்கு எதிராக நிர்மல் கவுர் கடைசி வரை துணிச்சலாகப் போராடியதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 91 வயதாகும் மில்கா சிங் தற்போது சண்டிகரிலுள்ள PGIMER மருத்துவமனையில் ஐசியு பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துவிட்டாலும், உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்துள்ளதால் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தியாவின் பெண்கள் வாலிபால் அணியின் கேப்டானாக இருந்தவர் மில்கா சிங்கின் மனைவி நிர்மல். மேலும், பஞ்சாப் அரசின் பெண்களுக்கான விளையாட்டு இயக்குநராகவும் இவர் இருந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+