ஸ்லீவ்லெஸ்தான் போடனும்.. தேர்வு எழுத போன பெண் ஆடையை வெட்டிய வாட்ச்மேன்.. தேசிய மகளிர் ஆணையம் விசாரணை
டெல்லி: தேர்வு எழுத சென்ற மாணவி தோள்பட்டைக்கு மேல் நீளமாக ஆடை அணிந்திருந்ததற்காக, அந்த ஆடையை கத்திரிகோலால் ஆண் ஊழியர் ஒருவர் வெட்டிய சம்பவம் ராஜஸ்தானில் நடந்த நிலையில் அதுகுறித்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணையை துவங்கியுள்ளது.
ராஜஸ்தான் நிர்வாக சேவைகள் தேர்வு சமீபத்தில் நடந்தபோதுதான் இதுபோன்ற அத்துமீறல் அரங்கேறியுள்ளது.
பிகானீர் மாவட்டத்திலுள்ள ஒரு தேர்வு மையத்திற்குள் தேர்வு எழுத சென்ற மாணவியின் தோள்பட்டைக்கு கீழே இருந்த சுடிதார் ஆடை பகுதியை ஆண் ஊழியர் கத்திரிக்கோலால் வெட்டிய அந்த புகைப்படம் பிரபல நாளிதழில் வெளியானது. ஸ்லீவ்லெஸ்தான் போட வேண்டும். தோள்பட்டைக்கு கீழே துணி இருக்க கூடாது என்பது ராஜஸ்தான் அரசின் உத்தரவு என அந்த நாளிதழ் குறிப்பிட்டது. இது நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது.

வானதி சீனிவாசன் கண்டனம்
ஆடையை வெட்டியது ஒரு தவறு என்றால், பெண் ஆடையை, ஆண் ஊழியர் வெட்டியது இன்னொரு தவறாகும் என்பதால் நாடு முழுக்க கண்டன குரல்கள் எழுந்தன. பாஜக மகளிர் பிரிவு தலைவர் வானதி சீனிவாசனும் ட்விட்டரில் இதை கண்டித்திருந்தார்.

வெட்கக்கேடு
இந்த நிலையில்தான், தேசிய மகளிர் கமிஷன் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மகளிர் கமிஷனர் கூறியிருப்பதாவது- இந்த சம்பவத்தால் தேசிய மகளிர் ஆணையம் அதிர்ச்சி அடைந்துள்ளது. பெண்களை இதுபோன்ற துன்புறுத்தலுக்கு ஆளாக்குவது முற்றிலும் அவமானகரமானது மற்றும் வெட்கக்கேடான சம்பவம். இதை NCW வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த விவகாரத்தில் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை நடத்தும்.

பெண்கள் இல்லையா
தேர்வு மையத்தில் தேர்வு எழுத வந்த பெண்ணிடம் சோதனையிடுவதற்கு, பெண் காவலர் ஏன் நியமிக்கப்படவில்லை என்பது குறித்தும் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரைவில் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் அரசு நடைபெற்று வருவதால் இந்த விவகாரம் தொடர்பாக தேசிய அளவில் பாஜக தலைவர்கள் பலரும் குரல்களை எழுப்பி வருகின்றனர். அதேநேரம் தமிழகத்தில் மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வு நீட் நடைபெற்றபோது மாணவிகள் தாலி, கம்மல், செயின் போன்றவற்றை கழற்றி வைத்துவிட்டு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி வானதி சீனிவாசன் பின்னூட்டத்தில் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications