நேருதான் காரணம்.. ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைவதை தாமதப்படுத்தினார்.. பாஜக பதிலடி
டெல்லி: ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைவதை ஜவஹர்லால் நேருதான் தாமதப்படுத்தினார் என்று பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் வல்லப் வித்யாநகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, ''இந்தியாவின் சமஸ்தானங்களின் இணைப்பு பிரச்சினையை சர்தார் வல்லபாய் படேல் தீர்த்தார். 'ஆனால், ஒருவரால்' காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை என்று பேசியிருந்தார்.

சுதந்திரத்துக்கான கனவு
நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவை மறைமுகமாக தாக்கி பிரதமர் மோடி அவ்வாறு பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் செய்தி தொடர்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டரில் கூறியதாவது:- காஷ்மீரை அப்போது ஆட்சி செய்த மகாராஜா ஹரி சிங், இந்தியாவோடு இணைப்பதற்கு தயக்கம் காட்டினார். சுதந்திரத்திற்கான கனவு அப்போது இருந்தது.

கிரண் ரிஜிஜூ ட்விட்
ஆனால், பாகிஸ்தான் ஊடுருவிய போது, இந்தியாவோடு காஷ்மீரை ஹரிசிங் இணைத்தார். நேரு உடனான நட்பு மற்றும் காந்தி மீது அவர் வைத்திருந்த மரியாதை காரணமாக ஷேக் அப்துல்லா ( ஜம்மு காஷ்மீரின் முதல் முதல்வர்) இந்த இணைப்புக்கு ஆதரவு அளித்தார்" என்று பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில், ஜெய்ராம் ரமேஷின் இந்த ட்விட்டுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ ட்விட்டரில் பதலடி கொடுத்துள்ளார்.

வரலாற்று பொய்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டில், ''மகாராஜா ஹரிசிங் முதல் முறையாக கடந்த ஜூலை 1947-ஆம் ஆண்டு காஷ்மீர் இணைப்பு தொடர்பாக ஜவஹர்லால் நேருவை அணுகினார். ஆனால், இதை நேரு மறுத்தார். பிற மாநிலங்கள் இணைக்கப்பட்ட போதும் காஷ்மீர் நிராகரிக்கப்பட்டது. நேருவின் சந்தேகத்திற்கு இடமான இந்த பங்கை மறைப்பதற்காக மகராஜா ஹரி சிங் காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க தயக்கம் காட்டினார் என்ற வரலாற்று பொய் நீண்ட காலமாக நிலவி வருகிறது'' என்றார்.

முட்டாள் தனமான செயல்
மேலும், காஷ்மீர் விவகாரத்தில் வாக்கு வங்கி அரசியலுக்காக சில தந்திர வேலைகளில் ஜவஹர்லால் நேரு ஈடுபட்டதாக குற்றம் சாட்டிய கிரண் ரிஜிஜூ, 'நேருவின் முட்டாள்தனமான செயல்களுக்காக இந்தியா இன்றும் விலை கொடுத்து வருகிறது' எனவும் சாடினார்.
-
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications