அதிகரிக்கும் ஓமிக்ரான் கேஸ்கள்.. கேரளாவில் இரவு ஊரடங்கு அமல்.. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை
டெல்லி: கேரளாவில் ஒமிக்ரான் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த டிசம்பர் 30 முதல் ஜனவரி 2ம் தேதி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் நவம்பர் மாதம் முதலில் ஓமிக்ரான் என்ற புதிய உருமாறிய கொரோனா ஒன்று கண்டறியப்பட்டது. உலக சுகாதார அமைப்பு இதைக் கவலைக்குரிய கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது.
இந்த உருமாறிய கொரோனா டெல்டாவை காட்டிலும் 3 மடங்கு வரை வேகமாகப் பரவலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே பல நாடுகளில் ஓமிக்ரான் கொரோனாவால் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.

ஓமிக்ரான் கேஸ்கள்
இந்தியாவிலும் இந்த ஓமிக்ரான் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 578 பேருக்கு ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. ஓமிக்ரான் அச்சம் காரணமாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் தேவையான உத்தரவுகளைப் பிறப்பிக்கலாம் என மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன் கடிதம் அனுப்பியிருந்தது. அதில் தேவைப்பட்டால் கட்டுப்பாடுகளை அமல்படுத்துமாறும் கூறப்பட்டிருந்தது.

கூடுதல் கட்டுப்பாடுகள்
பெரும்பாலான மாநிலங்களில் ஏற்கனவே புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசின் இந்த உத்தரவுக்குப் பின்னர் பல்வேறு மாநிலங்களிலும் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. இரவு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கேரளாவில் இரவு ஊரடங்கு
இதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில். இப்போது கேரளாவிலும் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கேரளாவில் ஒமிக்ரான் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த டிசம்பர் 30 முதல் ஜனவரி 2ம் தேதி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

ஓமிக்ரான் கேஸ்கள்
இந்தியாவில் தற்போது வரை 578 ஓமிக்ரான் கேஸ்கள் கண்டறியப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாகத் தலைநகர் டெல்லியில் 142 பேருக்கு ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 141 பேருக்கும் கேரளாவில் 57 பேருக்கும் ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து குஜராத்தில் 49 பேருக்கும் ராஜஸ்தானில் 43 பேருக்கும் ஓமிகன்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
பாப்பா எப்படி இருக்கா? தந்தை கேட்டதுமே கண்கலங்கிய டாக்டர்கள்.. ஆஸ்பத்திரியில் நடந்த அந்த அதிசயம் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்?












Click it and Unblock the Notifications