தமிழில் நிர்மலா சீதாராமன் வைத்த “புகார்”.. கொந்தளித்த திமுகவினர்! தமிழக சட்டமன்றம்போல் மாறிய லோக்சபா
டெல்லி: பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்தபோது தமிழ்நாடு அரசு ஏன் குறைக்கவில்லை என மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழில் கேள்வி எழுப்பியதால் எதிர்க்கட்சிகள் ஆவேசமடைந்தனர்.
Recommended Video
கடந்த வாரம் தொடங்கிய மழைக்கால கூட்டத் தொடரில் ஆரம்பத்திலிருந்தே ஒவ்வொரு நாளும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக நாடாளுமன்ற லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் தொடர்ந்து அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வந்தன.

எதிர்க்கட்சிகள் கோரிக்கை
பண வீக்கம், பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கவும் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவற்றை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதன் காரணமாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

விலைவாசி விவாதம்
இந்த நிலையில் இன்று லோக்சபாவில் இன்று விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதில் திமுக, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பிக்கள் மத்திய அரசையும், அதன் பொருளாதார கொள்கைகளையும், ஜி.எஸ்.டி. வரி உயர்வையும் கடுமையாக விமர்சித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

நிர்மலா சீதாராமன் பேச்சு
இதனை தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆற்றிய பதிலுரையில், திடீரென தமிழில் பேசினார். "கடந்த 2021 நவம்பர் 3 ஆம் தேதி பெட்ரோல் மீதான வரியை ரூ.5 குறைத்தார் மோடி ஐயா. டீசல் மீது ரூ.10 வரியை குறைத்தார். மே 2022-ல் பெட்ரோல் மீது ரூ.9.50 பைசா வரியும், டீசல் மீது ரூ.7 வரி குறைக்கப்பட்டது. அதே நாள் சமையல் எரிவாயு உஜ்வாலா வாடிக்கையாளர்களுக்கு ரூ.200 மானியம் கொடுப்பதாகவும் அறிவித்தார்.

எதிர்க்கட்சிகள் முழக்கம்
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு முன் திமுக தேர்தல் வாக்குறுதியில் ரூ.5 குறைப்போம். டீசலுக்கு ரூ.4 குறைப்போம் என்று கூறினார்கள். சமையல் எரிவாயுக்கு ரூ.100 மானியம் தருவதாகவும் சொன்னார்கள். இதனை கண்டித்து திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் எம்பிக்கள் முழக்கமிட்டனர். அப்போது அவேசமடைந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் "என்னால் கத்த முடியாது.

வாக்குவாதம்
அவர்கள் பேசும்போது நான் கேட்கனும். ஆனால் பதில் கொடுக்கும்போது அவர்கள் தடுத்து நிறுத்துவது நல்ல அரசியல் இல்லை. நான் சொல்றத நீங்க கேட்டுதான் ஆக வேண்டும். நீங்கள் சொல்லியதை நான் கேட்டேன். நான் உண்மையை சொல்வதால் உள்நோக்கத்துடன் அவர்கள் சத்தமிடுகிறார்கள். ஆட்சேபனை இருந்தால் அவர்கள் பின்னர் பேசட்டும்" என்றார்.
-
திமுக கூட்டணியில் 7 சீட்டா? எந்தெந்த தொகுதிகள்? நாளை மேஜர் மீட்டிங்.. இறுதி முடிவெடுக்கும் விசிக! -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
Velmurugan: விஜய் உடன் கூட்டணி அமைக்கிறதா தவாக? வேல்முருகன் முன் இருக்கும் கூட்டணி வாய்ப்புகள் என்ன? -
"ஜெயிக்க வேண்டிய தேர்தல் இது.." கடும் கோபத்தில் ராகுல்! நள்ளிரவை தாண்டி.. என்ன நடந்தது -
திமுகவில் குறைந்த எண்ணிக்கை தொகுதியால் வலி இருக்கிறது! ஆனாலும் 234-லிலும்...! திருமாவளவன் வேதனை -
சிஎஸ்கேவில் ஏன் தமிழர்கள் சேர்க்கப்படவில்லை? இதற்காக முதல்வர் ஸ்டாலினை போராட சொன்ன டிடிவி தினகரன்! -
5 தொகுதிகளுக்கு சரி.. ஆனால் சென்னையில் 2 தொகுதிகள் கொடுங்க.. திமுகவுக்கு சிபிஎம் விதித்த நிபந்தனை! -
லோக்கல் பாலிடிக்ஸ்..கண் வைத்த கனிமொழி! க்ரீன் சிக்னல் கொடுக்காத ’உடன்பிறப்பு’..’சிலருக்கு’ சிக்கலாமே -
திருமங்கலம் வாக்காளர்களுக்கு திரும்பவும் திருவிழா.. போட்டி போட்டு தயாராகும் தலைகள்.. அடைமழை தான்! -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
சுருண்டு விழுந்த சூரியன்! 91இல் வீசிய ‘ராஜீவ்’ அலை.. 2 வருடத்தில் ’நேஷனல் லீடர்’ ஆன ஜெயலலிதா -
வெயிட்டாக எதிர்பார்க்கும் காங்., அசைந்து கொடுக்குமா அறிவாலயம்? லிஸ்டோடு தவிக்கும் கதர் கட்சியினர்!










Click it and Unblock the Notifications