டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செயற்கை சுவாசம், பல்ஸ் ஆக்ஸிமீட்டர்.. சிவ சிவ! நான் சொல்வதெல்லாம் உண்மை.. ஆதாரத்தை வெளியிட்ட நித்தி

Google Oneindia Tamil News

டெல்லி: சிவசிவ நான் சொல்வதெல்லாம் உண்மை என புகைப்பட ஆதாரத்தையும் நித்தியானந்தா வெளியிட்டுள்ளார்.

Recommended Video

    Nithyananda உடல்நிலை கவலைக்கிடம் என வதந்தி! நித்தி கொடுத்த விளக்கம் | Oneindia Tamil

    கைலாசாவின் அதிபர் என தன்னை தானே அறிவித்து கொண்டவர் நித்தியானந்தா. பாலியல் புகாரில் சிக்கி போலீஸார் கண்களில் மண்ணை தூவி விட்டு கைலாசா எனும் தீவில் சிஷ்யர்கள் புடைச்சூழ நித்தி இருப்பதாக கூறியுள்ளார்.

    ILTS தலைவரான முதல் ஆசியர் “பிறந்து 5 நாளே ஆன குழந்தை” உயிரை காப்பாற்றியவர் - யார் இந்த முகமது ரேலா? ILTS தலைவரான முதல் ஆசியர் “பிறந்து 5 நாளே ஆன குழந்தை” உயிரை காப்பாற்றியவர் - யார் இந்த முகமது ரேலா?

    தினந்தோறும் பேஸ்புக்கில் சொற்பொழிவு ஆற்றி வருகிறார். அவ்வப்போது தன்னை பிடிக்க முயற்சிக்கும் போலீஸாருக்கு தனக்கே உரிய ஸ்டைலில் சிரித்துக் கொண்டே ஆங்கிலத்தில் பேசுவார். சில நேரங்களில் தமிழிலும் பேசுவார்.

    மக்கள் ரசனை

    மக்கள் ரசனை

    இதை மக்கள் ரசிப்பார்கள். இந்த நிலையில் நித்தியானந்தா படுத்த படுக்கையாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. மேலும் அவர் சொற்பொழிவு ஏதும் ஆற்றாததால் அவர் இறந்துவிட்டார் என பலர் வதந்தி பரப்பி வந்தனர். இதை மறுத்த நித்தியானந்தா, நான் திரும்பி வந்துட்டேனு சொல்லு என ஒரு பேஸ்புக் போஸ்ட்டையும் வெளியிட்டிருந்தார்.

    புகைப்படங்கள்

    புகைப்படங்கள்

    மேலும் தனது புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார். அதில் அவர் உடல் மெலிந்து காணப்பட்டார். இதனால் நித்தியானந்தாவுக்கு என்னாச்சு என கேட்டிருந்தனர். இந்த நிலையில் தனது உடல்நிலை குறித்து நித்தியானந்தா நேற்றைய தினம் ஒரு போஸ்ட்டை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் எனது இதயம் 18 வயது இளைஞரின் இதயத்தை போல் இயங்குகிறது.

    உடல் பரிசோதனை

    உடல் பரிசோதனை

    எனது உடல் பரிசோதனைகள் எல்லாம் முடிந்துவிட்டன. எல்லா மருத்துவ அறிக்கைகளும் நன்றாக இருக்கின்றன. எனது உடலில் அருணகிரி யோகேஸ்வரா இருக்கிறார். எனவே உங்கள் நலனுக்காகவோ இல்லை இந்த உலகின் நலனுக்காகவோ நான் உயிருடன் நீண்ட காலம் வாழ யாராவது விரும்பினால், அருணாசலேஸ்வரர் கோயிலில் உள்ள அருணகிரி யோகேஸ்வர ஜீவசமாதிக்கு போய் விளக்கு ஏற்றுங்கள்.

     மகிழ்ச்சி

    மகிழ்ச்சி

    நான் எத்தனை காலம் உயிரோடு இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியது அருணகிரி யோகேஸ்வரர்தான். சீடர்கள், பக்தர்கள் அன்பு என்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும். நிர்வி கல்ப சமாதி நிலையிலேயே எனது உடல் நன்றாக இயங்கும். ஞானவாபி மசூதியில் காசி விஸ்வநாதரின் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதை அறிந்ததும் நான் மகிழ்ச்சி அடைந்தேன்.

    செயற்கை சுவாசம்

    செயற்கை சுவாசம்

    இதை படித்தவுடன் செயற்கை சுவாச கருவிகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டேன். சில மணி நேரங்களுக்கு நான் அங்கும் இங்கும் நடந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தேன். செயற்கை சுவாசம் இல்லாமல் நான் சுவாசித்தேன். என்னால் பேசவோ எழுதவோ முடியாமல் இருந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக நான் எழுதுகிறேன் (எனது விரலில் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் வைத்து எனது இதயத்தை கண்காணித்ததால் என்னால் விரலை பயன்படுத்தமுடியவில்லை). பேஸ்புக்கிலும் சோசியல் மீடியாவிலும் என்னால் முடிந்த வரை மெதுவாக டைப் செய்கிறேன் என தெரிவித்துள்ளார். அத்துடன் சிவ சிவ நான் சொல்வதெல்லாம் உண்மை என ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். பின்னர் அவரது பெயரையும் நேரத்தையும் எழுதியிருந்தார்.

    English summary
    Nithyananda posts his signature and wrote all the statements are true and he also released his photo.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X