பி.எப். மீதான 8.1% வட்டி விகிதத்தை குறைக்கப் போறீங்களா?வைகோ கேள்விக்கு மத்திய அரசு சொன்ன பதில் என்ன?
டெல்லி: வருங்கால வைப்பு நிதியான பி.எப். மீதான 8.1% வட்டி விகிதத்தை குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் கேள்விக்கு ராஜ்யசபாவில் மத்திய அரசு பதிலளித்துள்ளது.
ராஜ்யசபாவில் வைகோ எழுப்பிய கேள்வியும் மத்திய அரசின் பதிலும்: (அ) 2021-22 ஆம் ஆண்டிற்கான பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.1 சதவிகிதமாக அரசு ஒப்புதல் அளித்துள்ளதா? (ஆ) அப்படியானால், 40 ஆண்டுகளில் மிகக் குறைவாக இருப்பதற்கான காரணம் என்ன?
(இ) ஓய்வூதியத்திற்கான நிதியைச் சேமிப்பதற்கான ஒரே வழி வருங்கால வைப்பு நிதி மட்டுமே என்பதால், தொழிலாளர் வர்க்கத்தால் ஏதேனும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதா? (ஈ) அப்படியானால், அதன் விவரங்கள் மற்றும் பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவது குறித்து அரசு மறுபரிசீலனை செய்யுமா? (உ) இல்லையெனில், அதற்கான காரணங்கள் என்ன?

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புக்கான இணை அமைச்சர் ராமேஷ்வர் டெலி 21.07.2022 அன்று அளித்துள்ள பதில்: (அ) முதல் (உ): பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டம், 1952 இன் பாரா 60(1) விதிகளின்படி, பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஒவ்வொரு பணியாளரின் கணக்கில் மத்திய அரசால் நிர்ணயிக்கப்படும் வட்டி விகிதத்தில் வரவு வைக்கப்படும்.
மத்திய வைப்பு நிதி காப்புக் குழு (CBT), பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF)யுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் அதன் முதலீடுகளில் இருந்து பெறும் வருமானத்தைப் பொறுத்தது.
வருங்கால வைப்பு நிதித் திட்டம், 1952 இன் படி மட்டுமே அத்தகைய வருமானங்கள் விநியோகிக்கப்படுகின்றன. மத்திய வைப்பு நிதி காப்புக் குழு, பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதியத்தில் 8.10 சதவீத வட்டி விகிதத்தை 2021-22 ஆம் நிதி ஆண்டுக்கு, பரிந்துரை செய்துள்ளது. மத்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட,பொது வருங்கால வைப்பு நிதி 7.10%, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் 7.40%, சுகன்யா சம்ரித்தி நிதித் திட்டம் 7.60% போன்ற திட்டங்களை ஒப்பிடும்போது, பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் அதிகம்.
2021-2022 ஆம் நிதி ஆண்டிற்கான பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதியில் அங்கீகரிக்கப்பட்ட வட்டி விகிதத்தை 8.10% மறுபரிசீலனை செய்யும் திட்டம் எதுவும் இல்லை. இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications