காங்கிரஸில் ஒருமுகம்.. ஊடகங்களில் இன்னொரு முகம்.. சசிதரூரை விளாசி தள்ளிய தேர்தல் பொறுப்பாளர்
டெல்லி: காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலின்போது சசிதரூர் அணியினர் இரட்டை முகத்தை வெளிப்படுத்தினர் என தேர்தல் நடத்திய அதிகாரி மதுசூதன் மிஸ்திரி பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.
2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. இதையடுத்து ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இடைக்கால தலைவராக சோனியா காந்தி தொடர்ந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான அக்டோபர் 17 ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் தேர்தல்
இந்த தேர்தலில் திருவனந்தபுரம் எம்பி சசிதரூர், காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களை எம்பி மல்லிகார்ஜூன கார்கேவும் போட்டியிட்டனர். இதில் சோனியா காந்தியின் ஆதரவு மல்லிகார்ஜூன கார்கேவுக்கு இருந்தது. அக்டோபர் 17 ல் நடந்த தேர்தலில் மல்லிகார்ஜுன் கார்கே வெற்றி பெற்றார். 24 ஆண்டுகளுக்குப் பிறகு, நேரு குடும்பத்திற்கு வெளியே இருந்து ஒருவர் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கார்கே வெற்றி
இந்த தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே 7,897 வாக்குகளும், சசி தரூர் 1,072 வாக்குகளும் பெற்றனர். மொத்தம் 412 ஓட்டுக்கள் செல்லாமல் போனது. தேர்தலில் வெற்றி பெற்ற சசிதரூர், மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், ‛‛காங்கிரஸ் தலைவர் பதவி மிகவும் கவுரவமானது. வெற்றி பெற்ற மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வாழ்த்துக்கள்'' என்றார். இதற்கு நன்றி தெரிவித்த மல்லிகார்ஜூன கார்கே கட்சியை வளர்க்க சேர்ந்து பாடுபடுவோம் என அழைப்பு விடுத்துள்ளார்.

முறைகேடு புகார்
இதற்கு மத்தியில் தான் உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்த தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக சசிதரூரின் தேர்தல் முகவர் சல்மான் சோஸ் கடிதம் எழுதினார். மேலும் தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சசிதரூர் தரப்பு குற்றம்சாட்டியது. இதற்கு காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர் மதுசூதன் மிஸ்திரி பதில் அளித்துள்ளார். அதோடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் விவகாரத்தில் அவர் சசிதரூர் அணியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக மதுசூதன் மிஸ்திரி கூறியதாவது:

இரட்டை முகம்
சசிதரூர் அணியின் கோரிக்கையை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். ஆனாலும் கூட மத்திய தேர்தல் ஆணையம் அவர்களுக்கு எதிராக சதி செய்வதாக ஊடகங்களிடம் தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தொடர்பாக நான் அளித்த பதில்கள் அனைத்தும் திருப்தியாக இருப்பதாக சசிதரூர் அணியினர் எங்களிடம் கூறினார்கள். அதற்கு பின் ஊடகங்கள் முன்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

மன்னிக்க முடியாது
சசிதரூர் அணியினர் இரட்டை முகத்தை காண்பித்துள்ளனர். எங்களிடம் ஒரு முகத்தையும், ஊடகங்கள் முன்பு இன்னொரு முகத்தையும் காட்டினர். இதனை நினைத்து வருந்துகிறேன். தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறியது தவறான ஆதாரங்களின் அடிப்படையிலானது. சசிதரூருக்கு எதிராக செயல்பட்டதாக கூறி ஒரு சிறு புள்ளியில் இருந்து மலையளவு பிரச்சனையை உருவாக்க முயற்சி செய்தனர். இது மன்னிக்க முடியாது" என்றார்.
-
காத்திருக்கும் எதிர்பாராத ட்விஸ்ட்.. கேரள தேர்தலில் இப்படியொரு சம்பவமா.! புதிய தேர்தல் சர்வே -
ட்விஸ்ட் தரும் கேரளா.. காங்கிரஸ், இடதுசாரிக்கு நோ பெரும்பான்மை. சத்தமின்றி பாஜக சம்பவம்! புதிய சர்வே -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications