"ஆப்ரேஷன் கங்கா!" உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய இந்தியர்கள்.. மகிழ்ச்சியில் ஜெய்ஹிந்த் முழக்கம்
டெல்லி: உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இந்தியர்களுடன் புறப்பட்ட முதல் விமானம் மும்பையில் தரையிறங்கியது.
உக்ரைன் நாட்டில் கடந்த 3 நாட்களாகவே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. ரஷ்யா முழு வீச்சில் தனது ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளதால் அந்நாட்டில் பெரும் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது.
இதைக் கண்டித்து அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் என பல்வேறு நாடுகளும் பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகின்றன. இதன் காரணமாக உக்ரைன் நாட்டில் பெரும் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது.

நடவடிக்கை
ரஷ்யாவின் இந்த ராணுவ நடவடிக்கை காரணமாக உக்ரைன் நாட்டின் வான்வழி முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. இதனால் அங்கு சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்க உலக நாடுகள் மாற்றுவழி குறித்து ஆலோசித்து வருகிறது. உக்ரைன் நாட்டில் மாணவர்கள் உட்பட சுமார் 16 ஆயிரம் இந்தியர்கள் இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே அங்குச் சிக்கி உள்ள மாணவர்கள் உட்பட இந்தியர்களை வேறு வழிகளில் மீட்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.

இந்திய மாணவர்கள்
உக்ரைன் நாட்டை சுற்றி உள்ள அண்டை நாடுகளின் உதவியுடன் அங்குள்ள இந்திய மாணவர்கள் மீட்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டி இருந்தது. உக்ரைன் நாட்டில் இருந்து சாலை வழியாக ருமேனியா மற்றும் ஹங்கேரி நாடுகளுக்கு வந்து கொண்டு இருக்கின்றனர். இவர்களுக்காக ரஷ்யா மொழி பேசும் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இந்தியர்களை வெளியேற்றும் பணிகளைத் தானே நேரடியாகக் கண்காணித்து வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார்.

மும்பை வந்தடைந்த இந்தியர்கள்
இதற்காக வெள்ளிக்கிழமை ஏற்கனவே இரு விமானங்கள் ஹங்கேரி மற்றும் ருமானியா நாடுகளுக்கு அனுப்பப்பட்டு இருந்தன. இந்தச் சூழலில் உக்ரைனில் இருந்து ருமானியா சென்ற 219 இந்தியர்களுடன் ருமேனிய தலைநகர் புக்கரெஸ்ட்டில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் முதல் விமானம் வெற்றிகரமாக மும்பையில் தரையிறங்கி உள்ளது. உக்ரைனில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்தியர்களை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேரடியாக சென்று வரவேற்றார்.

அமைச்சர் பியூஷ் கோயல்
தாயகம் திரும்பிய பயணிகள் மகிழ்ச்சியில் ஜெய் ஹிந்த் முழக்கம் எழுப்பினர். இது தொடர்பான விடியோ இணையத்தில் டிர்ரெண்டிங்கில் உள்ளது தாயகம் திரும்பிய இந்தியர்களை வரவேற்பதாகத் தெரிவித்த அமைச்சர் பியூஷ் கோயல், உக்ரைனில் இருந்து பத்திரமாக அழைத்துவரப்பட்ட இந்தியர்களின் முகத்தில் புன்னகையைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ளார். வரும் நாட்களில் மேலும் பல மாணவர்கள் இந்தியா திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்ரேஷன் கங்காவின் முதல் படி வெற்றிகரமாக முடிந்துள்ளதாக அமைச்சர் ஜெய்சங்கர் ட்வீட் செய்துள்ளார்.

சொத்த ஊர்
அதேபோல தாயகம் திரும்பும் இந்தியர்களுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்த மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை, தடுப்பூசி, உணவு என அனைத்து செலவுகளையும் ஏற்பதாகவும் தெரிவித்திருந்தார். உக்ரைனில் இருந்து திரும்பியவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட உடன், அவர்கள் சொந்த ஊர் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications