Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லியில் பாஜக ஆபரேசன் தோல்வி.. ஒரு எம்எல்ஏ-க்கு ரூ.20 கோடி பேரம் பேசியதாக ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க பாஜக மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக அக்கட்சியின் செளரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, 2021-22-ம் ஆண்டுக்கான மதுபான கொள்கை வகுத்ததில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக டெல்லி துணைநிலை ஆளுநர் விகே சக்சேனா, சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்தார்.

Operation Lotus has failed in Delhi says Aam Aadmi Party

இதனைத்தொடர்ந்து, மணீஷ் சிசோடியா உள்பட 15 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. பின்னர் கடந்த 19ம் தேதி மணீஷ் சிசோடியாவின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 21 இடங்களில் சிபிஐ சோதனையில் ஈடுபட்டது.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து மணீஷ் சிசோடியா கூறுகையில், தன்னை பாஜகவைச் சேர்ந்த தலைவர்கள் தொடர்பு கொண்டதாகவும், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகினால் என் மீதான வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று கூறியதாக குற்றம்சாட்டினார். தொடர்ந்து, கடந்த 2 முதல் 3 நாட்களாக சில ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள் என்னை தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர்.

சிபிஐ மற்றும் அமலாக்க துறை சோதனை நடத்தப்படும் என தொடர்ந்து அவர்களுக்கு அச்சுறுத்தல்கள் விடப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கட்சியை விட்டு விலகும்படியும், அதற்காக பணம் அளிக்கப்படும் என ஆசை வார்த்தைகளும் கூறப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார். இதையடுத்து இன்று டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சில எம்எல்ஏ-க்கள் பணியின் காரணமாக வரவில்லை என்றும், மற்ற அனைவரும் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆம் ஆத்மி செய்தித்தொடர்பாளர் செளரப் பரத்வாஜ் கூறுகையில், பாஜக தரப்பில் ஆம் ஆத்மியைச் சேர்ந்த 12 எம்எல்ஏ-க்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

டெல்லி அரசை கவிழ்க்க பாஜக நடத்திய முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு எம்எல்ஏ-விடமும் தலா ரூ.20 கோடி கொடுக்க முன்வந்துள்ளனர். 40 எம்எல்ஏ-க்களை உடைக்க பாஜக முயற்சி மேற்கொண்டது. ஒரு எம்எல்ஏ-க்களுக்கு ரூ.20 கோடி என்றால் 40 பேருக்கு ரூ.800 கோடி பணம் அக்கட்சிக்கு எங்கிருந்து வருகிறது. இதனை சிபிஐ, அமலாக்கத்துறையினர் விசாரக்க முன்வருவார்களா என்று கேள்வி எழுப்பினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+