கெத்து.. ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு தாங்க! பிரதமர் மோடிக்கே போன்போட்டு பேசிய யஷ்வந்த் சின்ஹா!
டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா களமிறங்கி உள்ளார். இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு போன் செய்து யஷ்வந்த் சின்ஹா ஆதரவு கோரினார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம் முடிவுக்கு வருகிறது. இதனால் ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18ல் நடைபெற உள்ளது.
மேலும், ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.
வேட்புமனுத்தாக்கலுக்கு ஜூன் 29 கடைசி நாளாகும். ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை ஜூலை 21ல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர்
தற்போது ஜனாதிபதி தேர்தலில் இருமுனை போட்டி நிலவுகிறது. மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரெளபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக யஷ்வந்த் சின்கா களமிறக்கப்பட்டுள்ளார்.

பாஜகவுடன் நெருக்கம்
யஷ்வந்த் சின்கா பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் ஐஏஎஸ் பதவி வகித்தார். அதன்பிறகு பாஜக கட்சியில் இணைந்து செயல்பட்டார். தற்போது மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வருகிறார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது மத்திய அமைச்சராக இருந்தார். இதனால் இவருக்கும் பாஜக தலைவர்கள் நெருக்கமாக உள்ளனர்.
Recommended Video

பிரதமர் மோடி, ராஜ்நாத்சிங்கிடம் ஆதரவு
திரெளபதி முர்மு மற்றும் யஷ்வந்த் சின்கா ஆகியோர் கட்சி பாகுபாடு, சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டு கட்சி தலைவர்களிடம் ஆதரவு கோரி வருகின்றனர். இந்நிலையில் இன்று யஷ்வந்த் சின்கா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியேரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார். இதேபோல் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனையும் அவர் தொடர்பு கொண்டு ஆதரவு கோரினார்.

திங்கட்கிழமை மனுத்தாக்கல்
இதுபற்றி தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ‛‛எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளரான யஷ்வந்த் சின்காவுக்கு ஆதரவாக ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறோம்'' என்றார். மேலும் யஷ்வந்த் சின்கா வரும் திங்கட்கிழமை வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளார்.

பாஜக வேட்பாளர் மனுத்தாக்கல்
முன்னதாக இன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான திரெளபதி முர்மு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதன்பிறகு அவர் தனது கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார். திரெளபதி முர்முவின் வேட்புமனுத்தாக்கலில் கலந்து கொண்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தையும் அவர் நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். விரைவில் அவர் தமிழகம் வர உள்ளார். இதேபோல் பாஜகவின் தலைவர்கள் திரெளபதி முர்முவுக்கு ஆதரவாக பல்வேறு கட்சி தலைவர்களிடம் ஆதரவு கோரி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியினரிடம் அவர்கள் ஆதரவு கோரியதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தான் யஷ்வந்த் சின்கா பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராஜ்நாத் சிங்கிடம் ஆதரவு கோரியுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications