டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இவையும் கூடவா பொய்.. பிரதமர் மோடிக்கு டிவீட் போட்டு.. ப.சிதம்பரம் கேள்வி

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடி எதிர்க்கட்சியினரைப் பார்த்து பொய்களைப் பரப்புவதாக கூறுகிறார். ஆனால் அவருக்கு நான் சிலவற்றை நினைவூட்ட விரும்புகிறேன். அவையும் பொய்தானா என்று பிரதமர்தான் விளக்க வேண்டும்என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சாடியுள்ளார்.

P Chidambaram questions PM Narendra Modi

இதுதொடர்பாக அடுத்தடுத்து 3 டிவீட்களைப் போட்டு பொய் சொன்னது யார் என்று கேள்வி கேட்டுள்ளார் ப.சிதம்பரம்.

ப.சிதம்பரம் போட்டுள்ள ஒரு டிவீட்டில், பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகள் பொய்களைப் பரப்புவதாக மீண்டும் கூறியுள்ளார். ஆனால் நான் சிலவற்றை பட்டியலிட விரும்புகிறேன்.. அவையும் பொய்யா என்பதை பிரதமர் மோடிதான் விளக்க வேண்டும் என்று கூறியிருந்தார் ப.சிதம்பரம்.

இதுதொடர்பாக ப.சிதம்பரம் போட்டுள்ள மற்ற ட்வீட்டுகளில் கூறியிருப்பதாவது: அகில இந்திய விவசாயிகள் சங்கம்தான் விவசாயிகள் போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையானது ரூ. 1870 என்ற நிர்ணயிக்கப்பட்டாலும் கூட தாங்கள் ரூ. 900க்குத்தான் விற்க முடிவதாக கூறியுள்ளது அந்த சங்கம். இது பொய்யா பிரதமரே?

கொரோனாவை பரப்பியதாக கூறி கைது செய்யப்பட்ட தப்லீக் ஜமாத் அமைப்பினரை விடுவித்த டெல்லி கோர்ட், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் பெயரைக் கெடுக்கும் வகையில் இவர்களைக் கைது செய்திருக்க வாய்ப்புள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. இதுவும் பொய்யா பிரதமரே!

ஹாத்ராஸ் பாலியல் பலாத்கார சம்பவத்தில் உ.பி. போலீஸாராின் நிலைப்பாட்டிலிருந்து முரண்பட்டுள்ள சிபிஐ, நான்கு பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுவும் கூட பொய்தானா பிரதமரே என்று கேட்டுள்ளார் ப.சிதம்பரம்.

English summary
Former Finance minister P Chidambaram has questioned PM Narendra Modi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X