விவசாய சட்டங்களில் என்ன தவறு? ஒரு மாநிலத்தில் மட்டுமே போராட்டம்... அமைச்சர் நரேந்திர சிங் தோமர்
டெல்லி: விவசாய சட்டங்களில் என்ன தவறு உள்ளது என்று கேள்வி எழுப்பிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், போராட்டம் ஒரு மாநிலத்தில் மட்டுமே நடைபெறுவதாகத் தெரிவித்தார்.
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. நேற்று, காசிப்பூர் சென்ற எதிர்க்கட்சி எம்பிகள், விவசாயிகளைச் சந்திக்க முயன்றனர். இருப்பினும், போராடும் விவசாயிகளைச் சந்திக்க அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில், பல்வேறு எதிர்க்கட்சி எம்பிகளும் விவசாயிகள் போராட்டம் குறித்துப் பேசினர். காசிப்பூரிலுள்ள தடுப்புகள் பெர்லின் சுவர்களைப் போல உள்ளதாகக் காங்கிரஸ் எம்பி பிரதாப் சிங் பஜ்வா விமர்சித்தார்.

என்ன தவறு
இன்று நாடாளுமன்றத்தில் பேசிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், "விவசாயிகளின் இந்தப் போராட்டத்தை நாங்கள் மதிக்கிறோம். அதேநேரம் இந்த மூன்று விவசாய சட்டங்களில் என்ன தவறாக உள்ளது. அதை அவர்கள் குறிப்பிட்டால், அது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தலாம். விவசாய சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள அரசு தயாராகவே உள்ளது. இதற்காக தற்போதுள்ள விவசாய சட்டங்களில் ஏதோ தவறு உள்ளது என்று அர்த்தம் இல்லை.

ஒரு மாநிலத்தில் மட்டும் போராட்டம்
ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் மட்டுமே விவசாய சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடைபெறுகிறது, அவர்களுக்கு விவசாய சட்டங்கள் குறித்து தவறாகக் கூறப்பட்டுள்ளது. எங்கள் ஒப்பந்த விவசாய சட்டத்தால் விவசாயிகள் நிலங்கள் யாரிடமிருந்தும் பறிக்கப்படாது. விவசாயிகள் மிகவும் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும், ஜிடிபி-இல் விவசாயத்தின் பங்களிப்பை அதிகமாக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இந்த இலக்கைகளை அடைய விவசாய சட்டங்கள் முக்கியம்" என்றார்.

குறைந்தபட்ச ஆதரவு விலை
அதேபோல குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்துப் பேசிய அவர், "தற்போது உற்பத்தி செலவைவிடக் கூடுதலாக 50% தொகை குறைந்தபட்ச ஆதரவு விலையாக அறிவிக்கப்படுகிறது. ஆத்ம நிர்பார் திட்டத்தின் கீழ் விவசாய உள்கட்டமைப்பிற்காக ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாய துறையில் முதலீடுகளை அதிகப்படுத்த முயன்று வருகிறோம்" என்றார்

10 கோடி பேருக்கு வேலை
மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்டம் குறித்துப் பேசிய அவர், "இத்திட்டத்தைத் தொடங்கியது நீங்கள் தான். ஆனால் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இவை சரியாகப் பயன்படுத்தப்படவில்லை. எங்கள் அரசு தான் இதை முன்னோக்கி எடுத்துச் சென்றது. இத்திட்டத்தின் செயல்திறனை அதிகரித்தோம். கொரோனா காலத்தில் இத்திட்டத்திற்கான ஒதுக்கீட்டை 61 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து 1.11 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தினோம். இதன் மூலம் 10 கோடி பேருக்கு வேலை கிடைத்தது" என்றார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications