பாஜகவுக்கு எதிரான “மெகா” கூட்டணி.. நேரடி அரசியலில் பி.கே! “பெவிகால்” - நிதீஷ் மீது ஓபன் அட்டாக்
டெல்லி: 2024 தேர்தலுக்கு பாஜகவுக்கு எதிரான வலுவான கூட்டணியை கட்டமைக்க நம்பிக்கையான முகம் தேவை என்றும் நிதீஷ் குமார் அதற்கு சரியாக இருக்க மாட்டார் என்று பிரபல தேர்தல் வியூக நிபுணரும் ஐ பேக் நிறுவனருமான பிரசாந்த் கிஷோர் தெரிவித்து உள்ளார்.
டெல்லியில் தனியார் செய்தி நிறுவனத்துக்கு பிரசாந்த் கிஷோர் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், 2024 தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளுக்கு வலுவான இயக்கமும் நம்பிக்கையான முகமும் தேவை என்றார்.
பாஜகவும் பிரசாந்த் கிஷோரும் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக நிதீஷ் குமார் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வியை கேட்டு சிரித்த அவர், பீகார் முதலமைச்சர் சொல்வதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்றார்.

நிதீஷ் குமார்
"நிதீஷ் குமார் கடந்த மாதம் பாஜக கூட்டணியில் இருந்து விலகி தற்போது தலைவர்களையும், எதிர்க்கட்சிகளையும் சந்தித்து வருகிறார். இதனால் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க நிதீஷ் குமார் எடுக்கும் முயற்சிகள் பலனளிக்காது.

மெகா கூட்டணி
பாஜகவுக்கு எதிராக 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிட நம்பிக்கையான முகம் தேவைப்படுகிறது. அத்துடன் மக்கள் நம்பிக்கையும், அரசியல் பணியாற்றும் தொண்டர்களின் பலமும் அவசியம். நிதீஷ் குமாருக்கும் என் மீது எந்த கோபமும் இல்லை. இது ஒருவகையான பேசும் விதம். எனக்கும் அவருக்கும் நெருக்கமான உறவு உள்ளது.

நேரடி அரசியல்
பீகாரில் ஜன் சூரஜ் என்ற பிரச்சார இயக்கத்தை அறிமுகம் செய்த பிரசாந்த் கிஷோர் சிறந்த அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று அறிவித்து உள்ளார். அடுத்த பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு - 7 கட்சிகளின் கூட்டணிக்கும் இடையே போட்டி இருக்காது. பீகார் அரசியல் 180 டிகிரி திரும்பிவிட்டது. அடுத்த தேர்தலுக்குள் இன்னும் பல திருப்பங்களை பார்க்கலாம்.

முதலமைச்சர் இருக்கை
பீகாரில் பல தேர்தல் கூட்டணிகள் உருவாகவும் உடையவும் செய்கின்றன. உடையாத ஒன்று இருக்கிறது என்றால், நிதீஷ் குமாரும் முதலமைச்சர் இருக்கையும்தான். அது எந்த கூட்டணியாக இருந்தாலும் சரி. இதை அவரால் மட்டுமே செய்ய முடியும். அவரது விளம்பர தூதராக பெவிகால்தான் உள்ளது." என்றார்.
-
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் ஜாக்பாட்! முழு அதிரடி பலன்கள் இதோ -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications