வரலாறு காணாத அளவு.. 18 சதவீதம் உயர்ந்த விமான எரிபொருள் விலை.. இனி விமான கட்டணமும் பறக்கும் போலயே..!
டெல்லி: வரலாற்றில் இதுவரை இல்லாத நிலையில் விமான எரிபொருளின் விலை ஒரு கிலோ லிட்டருக்கு 18 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், ஆயிரம் லிட்டர் விமான எரிபொருள் 17 ஆயிரத்து 135 ரூபாய் அதிகரித்து, ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 666 ரூபாயாக உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணை நிறுவனங்கள் சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மாதந்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன.
பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலையைப் போலவே விமான போக்குவரத்துக்கு பயன்படும் ஏவியேசன் டர்பைன் ஃப்யூல் எனப்படும் விமான போக்குவத்து எரிபொருளின் விலையும் நிர்ணயிக்கப்படுகிறது.

விமான எரிபொருள்
கடந்த பல மாதங்களாக விமான எரிபொருளின் விலை மாற்றமில்லாமல் இருந்த வந்தது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் விமான எரிபொருளின் விலை உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்தது. விமான எரிபொருள் விலையை 8.5 சதவீதம் உயர்த்திய அரசு, விமான கட்டணத்தையும் விரைவில் அதிகரிக்கலாம் என அறிவித்தது. அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) நிறுவனமும், ஏவியேசன் டர்பைன் ஃப்யூல் விலையை உயர்த்தி அறிவித்தது.

18 சதவீதம் உயர்வு
கடந்த ஜனவரி மாதம் விமான எரிபொருளின் விலை ஒரு கிலோ லிட்டர் ரூபாய் 6743 அதிகரிக்கப்பட்டது. அப்போது டெல்லியில் புதிய விலையில் ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருள் 86308.16 ரூபாயாக இருந்தது. இந்நிலையில் வரலாற்றில் இதுவரை இல்லாத நிலையில் விமான எரிபொருளின் விலை ஒரு கிலோ லிட்டருக்கு 18 சதவீதம் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த வாரம் உயர்ந்ததை அடுத்து டெல்லியில் ஒரு கிலோ லிட்டர், அதாவது ஆயிரம் லிட்டர் விமான எரிபொருள் 17 ஆயிரத்து 135 ரூபாய் அதிகரித்துள்ளது.

6வது முறையாக விலை நிர்ணயம்
தற்போது ஆயிரம் லிட்டர் விமான எரிபொருள் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 666 ரூபாயாக உயர்ந்துள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் தொடர்ந்து 6வது முறை விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருள் விலை மொத்தம் 36 ஆயிரத்து 643 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்திலும் ஒன்றாம் தேதி மற்றும் 16 ஆம் தேதியில் விமான எரிபொருள் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

விமான கட்டணம்
புதிய விலை இன்று ( 16.03.22) முதல் அமலுக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விமான டிக்கெட் விலையில் கணிசமான தொகை விமான எரிபொருள் மற்றும் வரிக்கு செல்லும் என்பதால், விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு கட்டணத்தை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதுவரை எந்த ஒரு விமான நிறுவனத்திலிருந்தும் முறையான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இதே வழியை பின்பற்றி பெட்ரோல் டீசல் விலையையும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications