டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதுதான் சீக்ரெட் மெசேஜ்.. பிரியங்கா காந்தியின் ''அண்ணா'' டிவிட்டிற்கு பின் இவ்வளவு பிளானா?

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறித்து பிரியங்கா காந்தி செய்த டிவிட்டிற்கு பின் முக்கிய அரசியல் மெசேஜ் ஒன்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பிரியங்கா காந்தியின் ட்விட்டிற்கு பின் இருக்கும் ரகசியம் இதுதான்

    டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறித்து பிரியங்கா காந்தி செய்த டிவிட்டிற்கு பின் முக்கிய அரசியல் மெசேஜ் ஒன்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    கேரளா வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்காக இன்று அவர் வேட்புமனுத்தாக்கல் செய்தார்.

    அதேபோல் ராகுல் காந்தி அமேதி தொகுதியிலும் உத்தர பிரதேசத்தில் போட்டியிடுகிறார். ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்த போது அவருடன் பிரியங்கா காந்தியும் வயநாட்டிற்கு வந்தார்.

    பிரியங்கா காந்தி

    இந்த நிலையில் பிரியங்கா காந்தி ராகுல் காந்தி குறித்து டிவிட் செய்துள்ளார். அதில், என் அண்ணன், என் உண்மையான நண்பன், எனக்கு தெரிந்த மிக தைரியமான மனிதர். அவரை வயநாடு மக்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர் உங்களை எப்போதும் கைவிட மாட்டார், என்று தனது டிவிட்டில் குறிப்பிட்டு இருந்தார்.

    நடுங்க வைக்கும் புகார்கள்.. இத்தனை கேஸ்களா? உங்கள் தொகுதி எம்.பியின் கேஸ் ஹிஸ்டரி தெரியுமா?

    என்ன மெசேஜ்

    என்ன மெசேஜ்

    இதற்கு பின் பெரிய மெசேஜ் இருப்பதாக தற்போது செய்திகள் வருகிறது. அதன்படி ராகுல் காந்தி வயநாடு, அமேதி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றிபெற்றால் கண்டிப்பாக அமேதி தொகுதியைத்தான் விட்டுக்கொடுப்பார். இந்த அமேதி தொகுதியில் ராஜினாமா செய்து விடுவார். வயநாடு தொகுதியில் இருந்துதான் அவர் பாராளுமன்றம் செல்வார் என்கிறார்கள்.

     எங்க அண்ணனை விட்டுட்டு போறேன்.. பத்திரமா பாத்துக்கங்க.. பாசமலர் பிரியங்கா! எங்க அண்ணனை விட்டுட்டு போறேன்.. பத்திரமா பாத்துக்கங்க.. பாசமலர் பிரியங்கா!

    அதுதான்

    அதுதான்

    அதனால்தான் பிரியங்கா காந்தி ''ராகுலை வயநாடு மக்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.'' என்று குறிப்பிட்டு இருக்கிறார். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர் இப்படி சொல்லி இருக்கிறார். இனி ராகுல் காந்தி எப்போதும் இங்குதான் தேர்தலில் போட்டியிட போகிறார் என்று கூறுகிறார்கள். அதாவது இது இனி ராகுலின் நிரந்தர தொகுதியாக இருக்க போகிறது என்கிறார்கள்.

    யார்

    யார்

    அதேபோல் அமேதியில் ராகுல் பதவி விலகினால் அங்கு பிரியங்கா காந்திதான் போட்டியிடுவார் என்றும் கூறுகிறார்கள். ஏற்கனவே தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளது. காங்கிரஸ் சொல்லும் இடத்தில் நிற்பேன் என்று பிரியங்கா கூறினார். நேருவின் குடும்பம் நிற்கும் தொகுதி என்பதால் பிரியங்காவிற்கு அமேதியை நிரந்தரமாக கொடுக்கவே இந்த வயநாடு ஏற்பாடு என்று கூறுகிறார்கள்.

    English summary
    Priyanka Gandhi conveys a secret message from her tweet on Rahul Gandhi after Wayanadu nominations.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X