சீனாவுக்கு மறைமுக வார்னிங்.. இந்தியா, அமெரிக்கா, ஆஸி., ஜப்பான் நாடுகளின் கூட்டமைப்பு அதிரடி அறிக்கை
டெல்லி: சுதந்திரமான இந்தோ பசிபிக் மண்டலம் தேவை என்று குவாட் நாடுகளின் தலைவர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகள் குவாட் (Quad) நாடுகள் கூட்டணி ஏற்படுத்தியுள்ளன. இவற்றின் தலைவர்கள் பங்கேற்கும் முதல் உச்சிமாநாடு இந்திய நேரப்படி நேற்று இரவு நடைபெற்றது.
ரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோர் "குவாட்" நாடுகளின் தலைவர்களின் முதல் கூட்டத்தில் பங்கேற்றனர்.

ஜோ பிடன் பேச்சு
4 தலைவர்களுமே இந்தோ பசிபிக் மண்டலம் சுதந்திரமானதாகவும் அனைவருக்குமானதாகவும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினர். ஜோ பைடன் பேசுகையில், சர்வதேச சட்டங்களின்படி நமது மண்டலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

சுதந்திரம் தேவை
சுதந்திரமான சர்வதேச சமூகம் அமைவது முக்கியமானது. நமது ஒவ்வொருவரின் வருங்காலமும் நமது நாடுகளின் வருங்காலத்திற்காகவும், சுதந்திரமான இந்தோ பசிபிக் மண்டலம் அவசியமான தேவையாக இருக்கிறது. இந்த மண்டலத்தில் கூட்டுறவை மேம்படுத்துவதற்கு குவார்ட் நாடுகள் முக்கிய பங்காற்றும் என்று நம்புகிறேன். வருங்காலங்களில் உங்கள் அனைவருடனும் இணைந்து பணியாற்றுவதில் ஆர்வம் கொண்டு இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

மோடி பேச்சு
பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், நாம் அனைவருமே நமது ஜனநாயக கொள்கைகளின் அடிப்படையில் ஒன்று சேர்ந்து கொண்டுள்ளோம். இந்தோ பசிபிக் மண்டலத்தில் சுதந்திரமான சூழல் நிலவ வேண்டும் என்பதில் நாம் அனைவரும் ஒருமித்த கருத்து கொண்டவர்களாக இருக்கிறோம். தடுப்பூசி, பருவநிலை மாற்றம், புதிதாக உருவெடுத்து வரும் தொழில்நுட்பம் போன்றவை நமது இந்த ஆலோசனையில் முக்கியமான கருப்பொருளாக இருக்கிறது.

ஒரே குடும்பம்
குவாட் நாடுகளின் கூட்டமைப்பு இந்த உலகத்தின் நன்மைக்காக உழைக்கக்கூடிய கூட்டமைப்பு. இந்தியாவின் பாரம்பரிய கொள்கை வாசுதேவ குடும்பம் என்பதுதான். அதாவது உலகத்தையே ஒரே குடும்பமாக கருதுவது இந்திய பண்பாட்டின் பாரம்பரியம். எனவே நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து முன்பை விடவும் நெருக்கமாக பணியாற்ற வேண்டும்.

இந்தோ பசிபிக் நிலைத்தன்மை
பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் இந்தோ பசிபிக் மண்டலத்தின் வலிமை ஆகியவற்றை காப்பதற்காக நாம் ஒன்றாக பயணிக்க வேண்டும். இந்தோ பசிபிக் மண்டலத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கு இரு நாடுகளின் கூட்டமைப்பு முக்கியத்துவமாக மாறும் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் பேசுகையில், சுதந்திரமான ஜனநாயகம் கொண்ட நான்கு நாடுகளில் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளோம். நமது இந்த கூட்டமைப்பு, அமைதி, நிலைத்தன்மை, செழுமை, வளமை போன்றவற்றுக்கு உதவும் என்று நான் நம்புகிறேன்.
நாம் அனைவரும் இணைந்து, புதிய எதிர்காலத்தை படைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

சீனாவுக்கு எச்சரிக்கை
குவார்ட் நாடுகள் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், இந்தோ பசுபிக் மண்டலத்தை அனைவருக்கும் பொதுவானதாக மாறவேண்டும். ஜனநாயகத்தின் மாண்புகள் காக்கப்பட வேண்டும், நமது கூட்டுறவு மேம்பட வேண்டும். சர்வதேச நாடுகளின் எல்லை உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய எல்லையில் சீனா ஆக்கிரமிக்க முயற்சி செய்து வரக்கூடிய இந்த சூழ்நிலையில், இந்தோ பசிபிக் மண்டலத்தில் ஆதிக்கம் செலுத்த அதன் கடற்படைகள் முனையும் இந்த நேரத்தில், இதுபோன்ற ஒரு கூட்டறிக்கை வெளியாகியுள்ளது முக்கியமாக கருதப்படுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications