உண்மையை மறைப்பது.. பற்றைக்குறையை மறுப்பது.. எல்லாம் 'அவரது' போலி பிம்பத்தை காக்க.. ராகுல் தாக்கு
டெல்லி: மத்திய அரசு ஒருவரது பிம்பத்தைக் காக்க உண்மையை மறைப்பது, பற்றைக்குறையை மறுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் மிக மோசமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 3.49 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஒரே நாளில் 2,700க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக இந்தியாவில் தற்போது வரை 1.69 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல கொரோனா உயிரிழப்பும் இரண்டு லட்சத்தை நெருங்குகிறது. இதெல்லாம் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள தகவல்கள்.
இருப்பினும், உண்மையான கொரோனா பாதிப்பு இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் உயிரிழந்தவர்கள் தகனம் செய்யக் கூட டோக்கன் வாங்கி, பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
Shroud the truth
— Rahul Gandhi (@RahulGandhi) April 25, 2021
Deny oxygen shortage
Underreport deaths
GOI is doing everything...
...to save his fake image! pic.twitter.com/AfizkPPGGG
இந்நிலையில் இது குறித்து அமெரிக்காவின் பிரபல நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியைத் தனது ட்விட்டரில் பதிவிட்டு ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். அந்த செய்தியைப் பகிர்ந்துள்ள ராகுல் தனது ட்விட்டரில், "உண்மையை மூடிமறைப்பது, ஆக்சிஜன் பற்றாக்குறையை மறுப்பது, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மறைப்பது. மத்திய அரசு அவரது போலி பிம்பத்தைக் காக்க அனைத்தும் செய்கிறது" என யாருடைய பெயரையும் நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சித்த ட்வீட் செய்துள்ளார்.
ராகுல் காந்தியின் இந்த ட்வீட் தற்போது ட்விட்டரில் பலராலும் பகிரப்பட்டு வைராகியுள்ளது.
-
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications