2 மத்திய அமைச்சர்கள், ராகுல் காந்தி, பிரஷாந்த் கிஷோர் மொபைல்கள் உளவு பார்க்கப்பட்டதா? வெளியான தகவல்
டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பிரகலாத் சிங் பட்டேல், அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோரது செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டிருக்கலாம் என்று செய்தி வெளியாகி இருக்கிறது.
Recommended Video
இஸ்ரேலிய ஸ்பைவேர் 'பெகாசஸ்' '(Pegasus)ஐப் பயன்படுத்தி இந்தியாவில், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் தொலைபேசி எண்கள் உளவு பார்க்கப்பட்டதாக நேற்று முதல் வரிசையாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
இந்த சாப்ட்வேர் பதிவிறக்கம் செய்யப்ப்ட்ட செல்போன்களின் முழு கட்டுப்பாடும் அதை கண்காணிப்பவருக்கு போய் விடுமாம்.

உளவு செய்தி
பாரிஸ் நகரத்தைச் சேர்ந்த வணிக நோக்கற்ற பார்பைடன் ஸ்டோரிஸ் என்ற அமைப்பு, 17 மீடியா நிறுவனங்களுடன் இணைந்து இந்த உளவு தொடர்பான தகவல்களை திரட்டி உள்ளது. இதுபற்றி தி வயர் என்ற ஆங்கில செய்தி வெப்சைட் தொடர்ந்து தகவல்களை வெளியிட்டு வருகிறது. மத்தியில் தற்போது அமைச்சராக இருக்க கூடிய இரண்டு பேர், 40 பத்திரிக்கையாளர்கள், மூன்று எதிர்க்கட்சித் தலைவர்கள், ஒரு நீதிபதி, பல தொழிலதிபர்கள், பல சமூக போராளிகள் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டிருக்கலாம் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பிரசாந்த் கிஷோர்
தி வயர் வெப்சைட் வெளியிட்டுள்ள செய்தியின்படி, சமீபத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது பிரசாந்த் கிஷோர் செல்போன் உளவு பார்க்கும் பெகாசஸ் சாப்ட்வேர் மூலமாக ஹேக் செய்யப்பட்டு உளவு பார்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வியூக வகுப்பாளராக பிரசாந்த் கிஷோர் அப்போது பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மமதா பானர்ஜி கட்சிக்காரர்
மேலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி அபிஷேக் பானர்ஜி செல்போனும் உளவு பார்க்கப்பட்டிருக்கிறது. இவர் மம்தா பானர்ஜியின் உறவுக்காரர். ஆட்சி அதிகாரத்தில் இவரது தலையீடு அதிகமாக இருக்கிறது என்பது பாஜக குற்றச்சாட்டாக இருந்து வந்தது. ஜூன் மாதம் 14 நாட்கள், ஜூலை மாதத்தில் 12 நாட்கள் பிரசாந்த் கிஷோர் செல்போனில் ஹேக்கிங் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை பிரசாந்த் கிஷோர் ஜூலை 13-ஆம் தேதி சந்தித்த தினத்தன்று கூட அவரது செல்போன் உளவு பார்க்கப்பட்டு இருக்கிறது.

ராகுல் காந்தி செல்போன்
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பயன்படுத்தக்கூடிய 2 செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டிருக்கலாம், என்று தி வயர் செய்தி வெளியிட்டிருக்கிறது . மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பிரகலாத் சிங் படேல் ஆகியோர் செல்போன்கள் 2017 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டுவரை உளவு பார்க்கப்பட்டதாக அந்த வெப்சைட்டில் செய்தி வெளியாகியிருக்கிறது.

மத்திய அமைச்சர்கள் பெயர்
சமீபத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை விஸ்தரிப்பில் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் தொடர்பு எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடி துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பிரகலாத் சிங் பட்டேல் நீர்வளத் துறையின் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இது மட்டும் கிடையாது.. ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வராக இருந்த பாஜகவின் வசுந்தரராஜே சிந்தியாவின் தனிப்பட்ட செயலாளர் சஞ்சய் செல்போன் உளவு பார்க்கப்பட்டு இருக்கிறது. இவர் 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் மத்திய அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானியின் சிறப்பு அலுவலராக வேலை பார்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அமைச்சர் மறுப்பு
இதனிடையே இன்று நாடாளுமன்றத்தில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசுகையில், நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பாக இது போன்ற ஒரு செய்தி ஊடகங்களில் வெளியாக ஆரம்பித்து இருக்கிறது .இது உள்நோக்கம் கொண்டது. வாட்ஸப் நிறுவனத்துடன் சேர்ந்து இதுபோல உளவு பார்க்கப்பட்டதாக ஏற்கனவே கூறிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. இவர்கள் கூறக்கூடிய நபர்களின் தொலைபேசி எண்கள் அனைத்தும் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படுவதில் உண்மை கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
-
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications