மதுரை மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்ய கோரிய வழக்கு.. சுப்ரீம் கோர்ட்டிலும் தள்ளுபடி
டெல்லி: மதுரை மக்களவை தொகுதியில் நடைபெற்ற தேர்தலை ரத்து செய்யக் கோரி, கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
பணப்பட்டுவாடா நடந்துள்ளதால் மதுரை மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என அவர் கோரியிருந்தார். முன்னதாக மதுரை தொகுதி மக்களவைதேர்தலை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் ரமேஷ் மனு தாக்கல் செய்திருந்தார்.

புகார் விவரம்
அந்த வழக்கில் தேர்தலின் போது மதுரையில் நடத்தப்பட்ட அதிமுக கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு இனிப்பு வகைகள், உணவு,பரிசு பொருட்கள் மற்றும் நபர் ஒருவருக்கு தலா ரூ.500 கொடுக்கப்பட்டது. மேலும் கூட்டத்திற்கு வந்தவர்களை அரசு பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்களில் அழைத்து வந்தனர்.
எச்சரித்த நீதிமன்றம்
இது தேர்தல் விதிகளுக்கு எதிரானது. தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டியிருந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட், பொதுநலம் என்ற பெயரில் இதுபோல வழக்கு தொடர்வதை ரமேஷ் வாடிக்கையாக வைத்துள்ளதாக குறிப்பிட்டது. நீதிமன்ற நேரத்தை வீணடித்தால் பின் அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரித்து வழக்கை தள்ளுபடி செய்தது.
சுப்ரீம் கோர்ட் போன ரமேஷ்
இந்நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கடந்த 8-ம் தேதி ரமேஷ் வழக்கு தாக்கல் செய்தார். மனுவில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க கோரினார். மேலும் மதுரையில் வாக்கு பதிவு இயந்திர அறைக்குள் தாசில்தார் சென்றது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. கள்ளஓட்டுகள் போடப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. விதிகளுக்கு புறம்பாக அதிமுக வேட்பாளர்கள் அதிகம் செலவு செய்துள்ளனர். மதுரை தொகுதியில் அதிகளவில் பணப்பட்டுவாடா நடைபெற்றுள்ளது என புகார் தெரிவித்திருந்தார்
வழக்கு ஏற்பு
இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் பட்டியலிடப்படாமலேயே இருந்தது. எனவே தேர்தலை ரத்து செய்ய கோரும் மனுவை விரைந்து விசாரிக்குமாறு தலைமை நீதிபதியிடம், ரமேஷ் சார்பில் கோடைகால சிறப்பு அமர்வு நீதிபதிகள் முன்பு 15-ம் தேதி முறையிடப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கை இன்று விசாரித்தனர்
கைவிரித்த சுப்ரீம் கோர்ட்
கே.கே.ரமேஷின் மனுவை விசாரித்த நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமயிலான அமர்வு, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மதுரை மக்களவை தொகுதியில் ஏற்கனவே வாக்குப் பதிவு நடந்து முடிந்து விட்டதால், தேர்தலை ரத்து செய்து உத்தரவிட முடியாது என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications