Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஷாக்.. டெல்லி சைக்கோ கொலைக்காரன் ஒரு "சீரியல் கில்லரா"? உண்மை கண்டறியும் சோதனைக்கு ரெடியான போலீஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் தன்னுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த காதலி சாரதாவை கொடூரமாக கொலை செய்த சைக்கோ கொலைக்காரன் அப்தாப்பை உண்மைக் கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த அனுமதியை அடுத்து, இன்னும் ஓரிரு தினங்களில் கொலையாளி அப்தாப்புக்கு உண்மை கண்டறியும் சோதனையை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

அப்தாப்பிடம் இதுவரை நடத்திய விசாரணையில், அவர் ஒரு சீரியல் கொலையாளியாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். அதாவது, சாராதவுக்கு முன்பே அவர் யாரையாவது கொலை செய்திருக்கக் கூடும் என போலீஸார் கருதுகின்றனர். எனவே இந்த உண்மைக் கண்டறியும் சோதனையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாக வாய்ப்பிருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிர வைத்த சைக்கோ..

அதிர வைத்த சைக்கோ..

மும்பையைச் சேர்ந்த இளம்பெண்ணான சாரதா தனது பெற்றோரின் எதிர்ப்பை மீறி அப்தாப் அமீன் (26) என்ற இளைஞருடன் திருமணம் ஆகாமலேயே சேர்ந்து வாழும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார். மும்பையில் தங்கியிருந்த அவர்கள், சாரதாவின் பெற்றோரின் தொடர் எதிர்ப்பால் டெல்லிக்கு குடிபெயர்ந்தனர். டெல்லிக்கு வந்ததும் அப்தாப்புக்கு ஏராளமான இளம்பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டது. இது சாரதாவுக்கு பிடிக்காததால், அப்தாப்பை கண்டித்துள்ளார். மேலும், தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு அப்தாப்பை வலியுறுத்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்தாப், கடந்த மே மாதம் சாரதா கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

அடுத்தடுத்து அதிர்ச்சி..

அடுத்தடுத்து அதிர்ச்சி..

இந்நிலையில், சாரதாவிடம் இருந்து எந்த தொலைப்பேசி அழைப்பும் வராததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர். அதன் பிறகு, போலீஸார் நடத்திய விசாரணையில்தான் ஈரக்குலையை நடுங்க வைக்கும் தகவல்கள் வெளிவந்தன. சாரதாவை கொலை செய்ததோடு, அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி, அவற்றை ஃப்ரிட்ஜில் வைத்து பல நாட்களாக அவற்றை ஒவ்வொன்றாக காட்டுப் பகுதிகளில் புதைத்து வந்திருக்கிறார் அப்தாப். அது மட்டுமல்லாமல், சாரதாவின் தலையும், உடல் பாகங்களும் தனித்தனியாக ஃப்ரிட்ஜில் இருந்த போதே, ஒரு துளி பயம் கூட இல்லாமல் தனது வீட்டிற்கு பல இளம்பெண்களை அழைத்து வந்து அவர்களுடன் அப்தாப் உடலுறவு வைத்துக் கொண்டிருக்கிறார்.

சீரியல் கில்லரா?

சீரியல் கில்லரா?

போலீஸ் விசாரணையில், மேற்கூறிய தகவல்களை வாக்குமூலமாக அளித்துள்ளார் அப்தாப். இது, போலீஸாரையே குலைநடுங்கச் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அப்தாப்பின் நடவடிக்கையை பார்க்கும் போது அவன் சைக்கோவாக இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். மேலும், சாரதா கொலையிலும் அவர் பல உண்மைகளை மறைப்பதாக போலீஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், சாரதாவை கொலை செய்வதற்கு முன்பே அவர் வேறு யாரையாவது கொன்றிருக்கலாம் எனவும் போலீஸார் கருதுகின்றனர். அதாவது அவர் ஒரு சீரியல் கில்லராக இருக்கலாம் என்பது போலீஸாரின் யூகமாக இருக்கிறது.

உண்மைக் கண்டறியும் சோதனை..

உண்மைக் கண்டறியும் சோதனை..

எனவே, அப்தாப்பிடம் உண்மைக் கண்டறியும் சோதனையை நடத்த போலீஸார் முடிவு செய்தனர். இதற்கு அனுமதிக் கோரி டெல்லி செஷன்ஸ் நீதிமன்றத்திலும் போலீஸார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை ஆய்வு செய்த நீதிபதி, கொலையாளி அப்தாப்புக்கு உண்மைக் கண்டறியும் சோதனையை நடத்த அனுமதி அளித்தார். அதன்படி, இன்னும் ஓரிரு தினங்களில் அப்தாப்பிடம் உண்மைக் கண்டறியும் சோதனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவரும் என போலீஸார் உறுதியாக கூறுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+