பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பிற்கு சிறப்பு அதிரடிப்படை.. டெல்லி அரசு அறிவிப்பு
டெல்லி: மாநகர பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பிற்காக, சிறப்பு அதிரடிப்படை உருவாக்க உள்ளதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் எப்படியாவது மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மி பல்வேறு விதமான அறிவிப்புகளை அவப்போது வெளியிட்டு வருகிறது.

ஏனெனில் சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில், டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் ஒன்றில் கூட ஆம் ஆத்மி வெற்றி பெறவில்லை. 5 தொகுதிகளில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது ஆம் ஆத்மி.
இதே போக்கு நீடித்தால் அடுத்தாண்டு தேர்தலில் டெபாசிட் கூட மிஞ்சாது போல என ஆம் ஆத்மிக்கு அச்சம் ஏற்பட்டு விட்டது. இதனையடுத்து பொதுமக்களை தங்கள் வசம் இழுக்க, சமீபத்தில் டெல்லியில் பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என டெல்லி அரசு அறிவித்தது. இன்னும் இத்திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை.
இந்நிலையில் அடுத்த கவர்ச்சி அறிவிப்பாக பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மாநகர பேருந்துகளில் கண்காணிப்பில் ஈடுட அதிரடி படை அமைக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது டெல்லி அரசு.
இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள டிடிசி துணைத்தலைவர் ஜாஸ் மின்ஷா, தற்போது அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ள அதிரடிபடை பேருந்துகளின் உள்ளேயும், வெளியேயும் பெண்களின் பாதுகாப்புக்காக தீவிர ஆய்வு நடத்தும்.
இந்த அதிரடி படைக்கு மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் ஒப்புதல் வழங்கியுள்ளார். அதிரடிப்படை குழுவில் பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்தி வரும் தன்னார்வலர்கள், மற்றும் துறைசார் நிபுணர்கள் இடம் பெற உள்ளனர்.
மேலும் பேருந்தில் சிசிடிவி கேமரா பொருத்துவது ,அவசர உதவிக்கான பட்டன்களை பொருத்துவது, பேருந்துகளில் பாதுகாப்பு படை வீரர்களை நிறுத்துவது உள்ளிட்டவற்றுக்கும் டெல்லி அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications