பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பிற்கு சிறப்பு அதிரடிப்படை.. டெல்லி அரசு அறிவிப்பு
டெல்லி: மாநகர பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பிற்காக, சிறப்பு அதிரடிப்படை உருவாக்க உள்ளதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் எப்படியாவது மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மி பல்வேறு விதமான அறிவிப்புகளை அவப்போது வெளியிட்டு வருகிறது.

ஏனெனில் சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில், டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் ஒன்றில் கூட ஆம் ஆத்மி வெற்றி பெறவில்லை. 5 தொகுதிகளில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது ஆம் ஆத்மி.
இதே போக்கு நீடித்தால் அடுத்தாண்டு தேர்தலில் டெபாசிட் கூட மிஞ்சாது போல என ஆம் ஆத்மிக்கு அச்சம் ஏற்பட்டு விட்டது. இதனையடுத்து பொதுமக்களை தங்கள் வசம் இழுக்க, சமீபத்தில் டெல்லியில் பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என டெல்லி அரசு அறிவித்தது. இன்னும் இத்திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை.
இந்நிலையில் அடுத்த கவர்ச்சி அறிவிப்பாக பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மாநகர பேருந்துகளில் கண்காணிப்பில் ஈடுட அதிரடி படை அமைக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது டெல்லி அரசு.
இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள டிடிசி துணைத்தலைவர் ஜாஸ் மின்ஷா, தற்போது அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ள அதிரடிபடை பேருந்துகளின் உள்ளேயும், வெளியேயும் பெண்களின் பாதுகாப்புக்காக தீவிர ஆய்வு நடத்தும்.
இந்த அதிரடி படைக்கு மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் ஒப்புதல் வழங்கியுள்ளார். அதிரடிப்படை குழுவில் பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்தி வரும் தன்னார்வலர்கள், மற்றும் துறைசார் நிபுணர்கள் இடம் பெற உள்ளனர்.
மேலும் பேருந்தில் சிசிடிவி கேமரா பொருத்துவது ,அவசர உதவிக்கான பட்டன்களை பொருத்துவது, பேருந்துகளில் பாதுகாப்பு படை வீரர்களை நிறுத்துவது உள்ளிட்டவற்றுக்கும் டெல்லி அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications