இந்தியாவில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு அனுமதி.. வல்லுநர் குழு பரிந்துரை
டெல்லி: இன்று நடைபெற்ற மருத்துவ வல்லுநர் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் அவசரக்கால பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. 45 வயதைக் கடந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த டிக்கா உத்சவ் என்ற தடுப்பூசி திருவிழாவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. மேலும், சில மாநிலங்களிலும் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளன.

ஸ்புட்னிக் வி தடுப்பூசி
இந்தச் சூழ்நிலையில், இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் அவசரக்கால பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்க மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை செய்தது. இதைத் தொடர்ந்து விரைவில் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம், ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என டாக்டர் ரெட்டி நிறுவனம் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்திருந்தது. இதைப் பரிசீலனை செய்த வல்லுநர் குழு இது தொடர்பாகக் கூடுதல் தரவுகளைக் கேட்டிருந்தது.

முக்கிய ஆலோசனை
மேலும், ஸ்புட்னிக் வி தடுப்பூசியை எடுத்துக் கொள்பவர்களுக்கு ஏதேனும் மோசமான பக்கவிளைவுகள் ஏற்படுகிறதா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. இதையடுத்து மருத்துவ சோதனை முடிவுகளை டாக்டர் ரெட்டி நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன் சமர்ப்பித்திருந்தது. இதைத் தொடர்ந்து ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு அனுமதி அளிப்பது குறித்து மருத்துவ வல்லுநர் குழு இன்று ஆலோசனை நடத்தியது.

மூன்றாவது தடுப்பூசி
இந்தியாவில் தற்போது தடுப்பூசிக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், இந்தக் கூட்டம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. இதன் மூலம், இந்தியாவில் அனுமதி அளிக்கப்படும் மூன்றாவது தடுப்பூசியாக ஸ்புட்னிக் வி உள்ளது. ஏற்கனவே, இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் அக்டோபர் மாதத்திற்கு மேலும் 5 புதிய தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தடுப்பாற்றல் எவ்வளவு
ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் மூன்றாம்கட்ட சோதனை ஐக்கிய அமீரகம், வெனிசுலா, பெலாரஸ் ஆகிய நாடுகளில் நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 18 முதல் 99 வயதானவர்களுக்குத் தடுப்பூசி சோதனை நடத்தப்பட்டது. இந்தத் தடுப்பூசி சுமார் 92 % வரை பலனளிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு டோஸ் ஸ்புட்னிக் வி தடுப்பூசி 10 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications