மேற்கு வங்க வன்முறை.. "நான் விசாரிக்க மாட்டேன்.." விலகிக் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி
டெல்லி: பாஜக தொண்டர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் மேற்கு வங்க கலவரம் தொடர்பான வழக்கை விசாரிப்பதில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி விலகிக் கொள்வதாக அறிவித்தார்.
மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிறகு வன்முறைகள் நடைபெறுவதாகவும், திரிணாமுல் தொண்டர்களால், பாஜக தொம்டர்கள் கொலை செய்யப்படுவதாகவும் பாஜகவினர் குற்றம்சாட்டுகிறார்கள்.
இந்த நிலையில், பலியானவர்களின் குடும்பங்கள் சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்திற்கு சென்றிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி இந்திரா பானர்ஜி முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது. ஆனால், "நான் வழக்கை விசாரிக்க விரும்பவில்லை," என்று கூறி, நீதிபதி இந்திரா பானர்ஜி வழக்கில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டுள்ளார். நீதிபதி இந்திரா பானர்ஜி கொல்கத்தாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்கக்தாகும்.
தேர்தல்களுக்குப் பிறகு நடக்கும் ஒவ்வொரு வன்முறைச் செயலையும் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை என்று அழைக்க முடியாது என்று மேற்கு வங்க அரசு தனது பதிலில் கூறியிருந்தது.
இரண்டு பாஜக தொண்டர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி அரசு உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், வழக்கிலிருந்து இந்திரா பானர்ஜி விலகியுள்ளதால், வழக்கு இப்போது மற்றொரு பெஞ்சிற்கு அனுப்பப்படும்.
-
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
காங்கிரசுக்கு ராஜ்யசபா எம்பி சீட் காலி? மீனாட்சி நடராஜனின் மனு.. உச்ச நீதிமன்றம் நிராகரித்தது ஏன்? -
48 மணி நேரத்தில்.. மம்தாவுக்கு ஏற்பட்ட 5 அதிர்ச்சி.. திரும்பிய பக்கமெல்லாம் சிக்கல் மேல் சிக்கல்! -
13 நாள் மனைவியுடன் கணவர் பேசாதது மனரீதியான கொடுமை அல்ல! கோவை இளைஞர் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி -
4,000 EVM–கள் எரிந்தன.. 2026 மேற்கு வங்க தேர்தல் ரிசல்ட்டே அதுக்குள்ளத்தான்.. ஷாக் தந்த தீவிபத்து -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications