"இந்த" வகை கார்களுக்கு நாடு முழுக்க தடை? உச்ச நீதிமன்றம் சொன்ன வார்த்தை! கார் பிரியர்கள் அதிர்ச்சி
டெல்லி: இந்தியாவில் சொகுசு கார்களுக்கு முழுமையாகத் தடை விதிப்பது தொடர்பாக மத்திய அரசு யோசிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. வெகு சிலரால் மட்டுமே சொகுசு கார்களை வாங்க முடியும் என்பதால் இதனால் பெரிய பாதிப்பு இருக்காது என்றும் தெரிவித்தனர். அரசும் இந்த யோசனையை ஆதரிப்பதாக அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார்.
இந்தியாவில் இப்போது கார் சந்தை வேகமாக அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் டிராபிக், வெயில் உள்ளிட்ட காரணங்களால் கார்கள் கிட்டத்தட்ட மிடில் கிளாஸ் மக்களுக்கும் அவசியமான ஒன்றாக மாறுகிறது. அதிலும் சமீபத்தில் சில ஆண்டுகளாகச் சொகுசு கார் விற்பனை இந்தியாவில் கணிசமாக அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே சொகுசு கார்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் சில கருத்துகளைக் கூறியுள்ளது.

உச்ச நீதிமன்றம்
அதாவது மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு வகுத்த திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்த, சொகுசு பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு தடை விதிப்பது ஒரு நல்ல தொடக்கமாக அமையும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
மத்திய அரசின் மின்சார வாகன மேம்பாட்டுக் கொள்கைகளைச் சரியாக அமல்படுத்த வேண்டும் எனச் சொல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜாய்மால்யா பக்ஜி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தான் நீதிபதிகள் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தனர்.
சொகுசு கார்கள்
இது தொடர்பாக நீதிபதி சூர்யா காந்த் மேலும் கூறுகையில், "இந்த விவகாரத்தைக் கையாள்வதில் எனக்கு ஒரு யோசனை இருக்கிறது. இப்போது சந்தையில் பல மின்சார வாகனங்கள் இருக்கிறது. பெரிய சைஸ் கார்களும் உள்ளன. இவை பல விஐபிகளும் பெரிய நிறுவனங்களும் பயன்படுத்தும் சொகுசு கார்களுக்கு இணையான வசதிகளைக் கொண்டிருக்கின்றன.
முதலில் மிக உயர்ந்த சொகுசு வாகனங்களுக்குத் தடை விதிப்பது பற்றி யோசியுங்கள். இந்தத் தடை எந்த விதத்திலும் சாமானிய மக்களைப் பாதிக்காது. ஏனெனில் இந்திய மக்கள் தொகையில் மிகச் சிறிய பகுதியினரால் மட்டுமே அத்தகைய வாகனங்களை வாங்க முடியும்" என்றார்.
மத்திய அரசு
இந்த யோசனையை அரசு ஆதரிப்பதாக மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி தெரிவித்தார். இந்தப் பிரச்சினையைக் கையாள 13 அமைச்சகங்கள் ஈடுபட்டுள்ளதாகவும், அரசு இந்த விஷயத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் விளக்கினார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், மின்சார வாகனங்களின் விலை முன்பு அதிகமாக இருந்ததாகவும் இதனால் அப்போது மக்களை ஊக்குவிக்க ஊக்கத் தொகைகள் தரப்பட்டதாகக் குறிப்பிட்டார். இப்போது விலை குறைந்துவிட்டாலும் இப்போது மின்சார கார்களுக்கு போதுமான சார்ஜிங் நிலையங்கள் இல்லாதது முக்கிய சவாலாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
உச்ச நீதிமன்றம் கருத்து
அப்போது குறுக்கிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், "மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது மேலும் கூடுதல் சார்ஜிங் நிலையங்கள் வரும். இது மார்கெட் தொடர்பான பிரச்சினைகள். மின்சார வாகனங்கள் அதிகரிக்கும்போது, சார்ஜிங் நிலையங்களும் தானாகவே உருவாகும்.. மேலும், பெட்ரோல் பம்புகளிலும் சார்ஜிங் வசதிகளை அறிமுகப்படுத்த வேண்டும். இதற்காக மின்சார வாகனக் கொள்கையை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கலாம்" என்றார்.
இது தொடர்பாக மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யவுள்ளதாக அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கு அடுத்த நான்கு வாரங்கள் ஒத்திவைக்கப்பட்டது.
-
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா! -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்?












Click it and Unblock the Notifications