சுஷாந்த் சிங் மரணம்.. கசிந்தது வாட்ஸ் அப் உரையாடல்.. நடிகை ரியா மீது போதை தடுப்பு பிரிவு வழக்கு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் அடுத்த திருப்பமாக அவரது காதலி ரியா மீது டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கில் திடீர் திருப்பமாக ரியா சக்ரபோர்த்தியின் வாட்ஸ்அப் உரையாடல்களை ஆய்வுசெய்தத்தில் நடிகை போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரியா சக்போர்த்தியின் மொபைல் தொலைபேசியிலிருந்து அனுப்பப்பட்ட தொடர்ச்சியான வாட்ஸ்அப் செய்திகளில் எம்.டி.எம்.ஏ, மரிஜுவானா போன்ற போதைப்பொருட்களை ரியா அடிக்கடி பயன்படுத்துவதாக கூறப்பட்டது. அதில் ஒரு உரையாடலில், ரியா கவுரவ் அய்ரா என்ற போதைப்பொருள் வியாபாரிக்கு பேசியிருக்கிறார். "நாங்கள் கடினமான மருந்துகளை அதிகம் எடுத்துகொண்டது இல்லை. எம்.டி.எம்.ஏவை ஒரு முறை முயற்சித்தேன்", "உங்களிடம் எம்.டி இருக்கிறதா?" என கேட்கிறார்.

மற்றொரு உரையாடலில், ரியாவின் தொலைபேசியில் 'மிராண்டா சுஷி' என்ற பெயர் உள்ள ஒருவர் நடிகையிடம் "ஹாய் ரியா, விஷயங்கள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன" என்று கூறுகிறார்.மிராண்டா பின்னர் ரியாவிடம் "ஷோய்கின் (ரியாவின் சகோதரர்) நண்பரிடமிருந்து இதை எடுக்க வேண்டுமா? ஆனால் அவரிடம் ஹாஷ் & மொட்டு உள்ளது." என கூறி உள்ளார்.

4 சொட்டு பயன்படுத்துங்க

4 சொட்டு பயன்படுத்துங்க

ரியாவுக்கும் அவரது நண்பர் ஜெயா சஹாவுக்கும் இடையில் நடந்த உரையாடலில் நவம்பர் 25, 2019 அன்று, ஜெயா ரியாவுக்கு "தேநீர் அல்லது தண்ணீரில் 4 சொட்டுகளைப் பயன்படுத்துங்கள், அதை அவர் குடிக்க விடுங்கள் ... உதைக்க 30-40 நிமிடங்கள் கொடுங்கள்" என கூறி உள்ளார். "மிக்க நன்றி," என ரியா கூறுகிறார், மற்றும் ஜெயா "எந்த பிரச்சனையும் இல்லை சகோ, அது உதவும் என்று நம்புகிறேன்" என்று பதிலளித்திருக்கிறார். இவ்வாறாக உரையாடல் இருப்பது ஊடகங்களில் செய்தி லீக் ஆனதையடுத்து அவரது காதலி ரியா மீது டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

போதை தடுப்பு பிரிவு

போதை தடுப்பு பிரிவு

போதை பொருள் தடுப்பு சட்டத்தின் 20, 22, 27 மற்றும் 29 பிரிவுகளின் கீழ் ரியா சக்ரபோர்த்தி, அவரது சகோதரர் ஷோயிக் சக்ரபோர்த்தி மற்றும் பலர் மீது போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.போதைப்பொருள் தடுப்பு துணை இயக்குநர் (என்.சி.பி) கே.பி.எஸ் மல்ஹோத்ரா தலைமையிலான மூன்று பேர் கொண்ட டெல்லி போலீஸ் குழு , மும்பை போலீசுடன் இணைந்து இந்த வழக்கில் பணியாற்றவுள்ளது. வெள்ளிக்கிழமை டெல்லி போலீஸ் மும்பைக்கு புறப்பட உள்ளது,

கோவா வியாபாரி

கோவா வியாபாரி

ரியா மற்றும் ஷோயிக் ஜெயா சஹா தவிர, ஸ்ருதி மோடி மற்றும் கௌரவ் ஆர்யா ஆகியோரைத் தவிர, தற்போது கோவாவில் தீவிரமாக செயல்பட்டு வரும் புனேவைச் சேர்ந்த போதைப்பொருள் விற்பனையாளரும் விசாரிக்கப்படுவார்.

உறுதிப்படுத்திய இயக்குனர்

உறுதிப்படுத்திய இயக்குனர்

முன்னதாக கடந்த ஆகஸ்ட் 25 அன்று சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் போதைப்பொருள் கோணத்தில் விசாரிக்குமாறு தேசிய போதைப்பொருள் தடுப்பு அமைப்புக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியது. நர்கோ கட்டுப்பாட்டு பணியகத்தின் இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவும் இதை அண்மையில் உறுதிப்படுத்தியிருந்தார். சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கில் விசாரணையைத் தொடங்க உள்ளதாக அவர் கூறியிருந்தார். இதன்படி வழக்கு தொடரப்பட்டுளளது.

திட்டவட்ட மறுப்பு

திட்டவட்ட மறுப்பு

ஆனால் நடிகை ரியா சக்ரபோர்த்தியின் வழக்கறிஞர், அவர் ஒருபோதும் போதைப்பொருளை உட்கொள்ளவில்லை என்றும், அதை நிரூபிக்க எந்த நேரத்திலும் இரத்த பரிசோதனைக்கு தயாராக இருப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+