சுஷாந்த் சிங் மரணம்.. கசிந்தது வாட்ஸ் அப் உரையாடல்.. நடிகை ரியா மீது போதை தடுப்பு பிரிவு வழக்கு
டெல்லி: நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் அடுத்த திருப்பமாக அவரது காதலி ரியா மீது டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கில் திடீர் திருப்பமாக ரியா சக்ரபோர்த்தியின் வாட்ஸ்அப் உரையாடல்களை ஆய்வுசெய்தத்தில் நடிகை போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரியா சக்போர்த்தியின் மொபைல் தொலைபேசியிலிருந்து அனுப்பப்பட்ட தொடர்ச்சியான வாட்ஸ்அப் செய்திகளில் எம்.டி.எம்.ஏ, மரிஜுவானா போன்ற போதைப்பொருட்களை ரியா அடிக்கடி பயன்படுத்துவதாக கூறப்பட்டது. அதில் ஒரு உரையாடலில், ரியா கவுரவ் அய்ரா என்ற போதைப்பொருள் வியாபாரிக்கு பேசியிருக்கிறார். "நாங்கள் கடினமான மருந்துகளை அதிகம் எடுத்துகொண்டது இல்லை. எம்.டி.எம்.ஏவை ஒரு முறை முயற்சித்தேன்", "உங்களிடம் எம்.டி இருக்கிறதா?" என கேட்கிறார்.
மற்றொரு உரையாடலில், ரியாவின் தொலைபேசியில் 'மிராண்டா சுஷி' என்ற பெயர் உள்ள ஒருவர் நடிகையிடம் "ஹாய் ரியா, விஷயங்கள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன" என்று கூறுகிறார்.மிராண்டா பின்னர் ரியாவிடம் "ஷோய்கின் (ரியாவின் சகோதரர்) நண்பரிடமிருந்து இதை எடுக்க வேண்டுமா? ஆனால் அவரிடம் ஹாஷ் & மொட்டு உள்ளது." என கூறி உள்ளார்.

4 சொட்டு பயன்படுத்துங்க
ரியாவுக்கும் அவரது நண்பர் ஜெயா சஹாவுக்கும் இடையில் நடந்த உரையாடலில் நவம்பர் 25, 2019 அன்று, ஜெயா ரியாவுக்கு "தேநீர் அல்லது தண்ணீரில் 4 சொட்டுகளைப் பயன்படுத்துங்கள், அதை அவர் குடிக்க விடுங்கள் ... உதைக்க 30-40 நிமிடங்கள் கொடுங்கள்" என கூறி உள்ளார். "மிக்க நன்றி," என ரியா கூறுகிறார், மற்றும் ஜெயா "எந்த பிரச்சனையும் இல்லை சகோ, அது உதவும் என்று நம்புகிறேன்" என்று பதிலளித்திருக்கிறார். இவ்வாறாக உரையாடல் இருப்பது ஊடகங்களில் செய்தி லீக் ஆனதையடுத்து அவரது காதலி ரியா மீது டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

போதை தடுப்பு பிரிவு
போதை பொருள் தடுப்பு சட்டத்தின் 20, 22, 27 மற்றும் 29 பிரிவுகளின் கீழ் ரியா சக்ரபோர்த்தி, அவரது சகோதரர் ஷோயிக் சக்ரபோர்த்தி மற்றும் பலர் மீது போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.போதைப்பொருள் தடுப்பு துணை இயக்குநர் (என்.சி.பி) கே.பி.எஸ் மல்ஹோத்ரா தலைமையிலான மூன்று பேர் கொண்ட டெல்லி போலீஸ் குழு , மும்பை போலீசுடன் இணைந்து இந்த வழக்கில் பணியாற்றவுள்ளது. வெள்ளிக்கிழமை டெல்லி போலீஸ் மும்பைக்கு புறப்பட உள்ளது,

கோவா வியாபாரி
ரியா மற்றும் ஷோயிக் ஜெயா சஹா தவிர, ஸ்ருதி மோடி மற்றும் கௌரவ் ஆர்யா ஆகியோரைத் தவிர, தற்போது கோவாவில் தீவிரமாக செயல்பட்டு வரும் புனேவைச் சேர்ந்த போதைப்பொருள் விற்பனையாளரும் விசாரிக்கப்படுவார்.

உறுதிப்படுத்திய இயக்குனர்
முன்னதாக கடந்த ஆகஸ்ட் 25 அன்று சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் போதைப்பொருள் கோணத்தில் விசாரிக்குமாறு தேசிய போதைப்பொருள் தடுப்பு அமைப்புக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியது. நர்கோ கட்டுப்பாட்டு பணியகத்தின் இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவும் இதை அண்மையில் உறுதிப்படுத்தியிருந்தார். சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கில் விசாரணையைத் தொடங்க உள்ளதாக அவர் கூறியிருந்தார். இதன்படி வழக்கு தொடரப்பட்டுளளது.

திட்டவட்ட மறுப்பு
ஆனால் நடிகை ரியா சக்ரபோர்த்தியின் வழக்கறிஞர், அவர் ஒருபோதும் போதைப்பொருளை உட்கொள்ளவில்லை என்றும், அதை நிரூபிக்க எந்த நேரத்திலும் இரத்த பரிசோதனைக்கு தயாராக இருப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications