டெல்லி சிறையில் தாஜ்பூரியா கொலை- 6 தமிழக போலீஸ் சஸ்பெண்ட்- விசாரிக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு!
டெல்லி: டெல்லி திஹார் சிறையில் தாதா தாஜ்பூரியா படுகொலை சம்பவத்தில் 6 தமிழக போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி நீதிமன்ற வளாகத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்தது. இதில் தாதா தில்லு தாஜ்பூரியா கோஷ்டிக்கு தொடர்பு இருக்கிறது என்பது போலீஸ் குற்றச்சாட்டு. பல்வேறு வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் தில்லு தாஜ்பூரியா.

இந்நிலையில் தில்லு தாஜ்பூரியாவை மற்றொரு தாதா கும்பல், சிறைக்குள் நுழைந்து துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இப்படுகொலையை தடுக்க தவறியதாக பாதுகாப்பு பணியில் இருந்த 6 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த 6 பேரும் தமிழ்நாடு சிறப்பு காவல்படையை சேர்ந்தவர்கள். ஒரு குற்ற சம்பவத்தில் 6 தமிழ்நாடு போலீஸ் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியது.

தற்போது 6 தமிழ்நாடு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக விசாரணை நடத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதற்காக தமிழ்நாடு கமாண்டோ படை ஏடிஜிபி ஜெயராமன் டெல்லி விரைந்துள்ளார்.












Click it and Unblock the Notifications