அதானிக்கு எதிரான ஹிண்டன்பர்க் ரிப்போர்ட்! செபி ஆய்வு என்ன ஆனது? தள்ளி போகும் உச்சநீதிமன்ற விசாரணை
டெல்லி: அதானி குழுமத்தின் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற இருந்த நிலையில், விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான 'ஹிண்டன்பர்க்' சில மாதங்களுக்கு முன்னர் அதானி குழுமம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டிருந்தது. 413 பக்கங்கள் கொண்ட இந்த ஆய்வறிக்கையில், அதானி குழுமம் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருந்ததாக குற்றம்சாட்டியிருந்தது. "இந்த காலகட்டத்தில் அதானி குழுமத்தின் பங்குகள் அபரிமிதமாக வளர்ந்தது. பங்கு மதிப்புகளை அதிகரிக்க போலி நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்கள் வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளன" என்று ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியிருந்தது.

இந்த அறிக்கை வெளிவரும் போது அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு ரூ.9.84 லட்சம் கோடியாக இருந்தது. இதில் ரூ.8.2 லட்சம் கோடி, அதாவது மொத்த சொத்தில் முக்கால்வாசி சொத்துக்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் ஈட்டப்பட்டிருக்கிறது. அதுபோல இந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் 819% வளர்ச்சியடைந்திருக்கிறது. இதற்கு காரணம் மொரிசியஸ், கரீபின் தீவு உள்ளிட்ட வரி ஏய்ப்பு செய்ய வாய்ப்புள்ள நாடுகளில் போலி நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் அதானி குழுமத்தின் பங்குகளை வாங்க போலியான போட்டி உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த விஷயங்களைதான் ஹிண்டன்பர்க் விரிவாக பொதுவெளியில் வைத்தது. இதன் காரணமாக அதானி குழுமத்தின் பங்குகள் சரிய தொடங்கி தற்போது பெரும் நஷ்டத்தில் இருக்கிறார் அதானி. இதில் அதானிக்கு மட்டும் இழப்பீடு ஏற்படவில்லை, அதானி நிறுவனத்தை நம்பி ஏராளமான சிறு குறு நிறுவனங்கள் இயங்கி வந்தன. இந்த நிறுவனங்கள் இந்தியாவில் ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கி வந்திருந்தன. தற்போது அதானியே காலி எனில், இந்த நிறுவனங்களும் துடைத்தெறியப்பட்டன. இதில் வேலைப்பார்த்தவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை.
அதேபோல அதானி நிறுவனத்தில் எல்ஐசி மற்றும் எஸ்பிஐ வங்கி ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் பங்குகளும் முதலீடு செய்யப்பட்டன. தற்போது அதானி நஷ்டமடைந்துள்ளது எனில் இந்த பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளின் நிலை என்ன? என்று எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பி வருகின்றன. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மெற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எம்.சாப்ரே தலைமையில் நிபுணர் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் பங்குசந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி (SEBI) செய்த மாற்றங்கள் காரணமாக நிபுணர் குழுவின் விசாரணை திறன் கட்டுப்படுத்தப்பட்டதாக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எம்.சாப்ரே உச்சநீதிமன்றத்தில் கடந்த மே மாதம் அறிக்கை தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து செபி இது குறித்து விசாரணையில் இறங்கியது. தனது விசாரணை குறித்து கடந்த 26ம் தேதி உச்சநீதிமன்றத்தில் செபி அறிக்கை தாக்கல் செய்தது. அதில், "24 அம்சங்கள் குறித்த விசாரணையில் 22 விசாரணைகள் நிறைவடைந்துவிட்டன. மீதமுள்ள இரண்டு குறித்து விசாரிக்க வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியை நாடியுள்ளோம்" என்று கூறியிருந்தது. இதனையடுத்து இன்று உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை மீண்டும் வர இருந்தது. ஆனால் உச்சநீமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் ஜம்மு காஷ்மீரின் 370வது சட்டப் பிரிவை ரத்து செய்தது தொடர்பான வழக்கு விசாரணையை மேற்கொள்வதால், அதானியின் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications