மாணவர்கள் நலனே முக்கியம்.. சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து - பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு
டெல்லி: கொரோனா சூழலால் மாணவர்களின் நலன் கருதி சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டாக வகுப்புகள் சரியாக நடைபெறவில்லை. மிக தாமதமாக நம்பவரில் தான் கடந்த ஆண்டு 12ம் வகுப்புகளுக்கான பாடங்கள் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டன.
ஆனால் துரதிஷ்டவசமாக கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மார்ச் மாதத்தில் இருந்து மீண்டும் வேகமெடுத்தது. கடந்த 3 மாதமாக பாதிப்பு கடுமையாக உள்ளது. உயிரிழப்பும் முதல் அலையைவிட மிகமிக அதிகமாக உள்ளது.

பெற்றோர் கோரிக்கை
எல்லா மாநிலங்ளும் கொரோனா பரவலை தடுக்க கடுமையாக போராடி வருகின்றன. இந்த சூழலில் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்தன. கொரோனா பரவல் சூழலை கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த ஆண்டு சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று
பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைள் எழுந்தன.

மோடி அறிவிப்பு
இந்நிலையில் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து கொரோனா சூழலால் மாணவர்களின் நலன் கருதி சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

மாணவர்கள் நலன்
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில். 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் குறித்த முடிவு மாணவர்களின் நலனுக்காக எடுக்கப்பட்டுள்ளது: நமது மாணவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு மிக முக்கியமானது, இந்த விஷயத்தில் எந்த சமரசமும் இருக்காது.

பிரதமர் அறிவிப்பு
மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே உள்ள பதற்றம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்:
இத்தகைய மன அழுத்த சூழ்நிலையில் மாணவர்கள் பரீட்சைக்கு வருமாறு கட்டாயப்படுத்தக்கூடாது. அனைவரும் மாணவர்களின் நிலையை புரிந்து கொள்ள வேண்டும்" இவ்வாறு கூறியுள்ளார். '

விரைவில் வரும்
மதிப்பெண் எப்படி? கொரோனா சூழலால் மாணவர்களின் நலன் கருதி சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால், மதிப்பெண் எப்படி அளிக்கப்படும் என்று கேள்வி எழுந்துள்ளது. அது குறித்த அளவுகோல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications