வெரி குட் நியூஸ்.. தடுப்பூசி பெற்றவர்களுக்கு கொரோனா வருவது மிகக்குறைவாம்.. தரவுகளை நீங்களே பாருங்க!
டெல்லி: தடுப்பூசி போட்டவர்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு வருவது மிகமிகக் குறைவு என்று மத்திய அரசு நல்ல செய்தியை கொண்டு வந்துள்ளது.
நாட்டில் செயல்பாட்டில் உள்ள இரண்டு தடுப்பூசிகளும் கடுமையான நோய் மற்றும் மரணத்தைத் தடுக்கின்றன. இந்த தடுப்பூசிகள் தொற்றுநோயைக் குறைக்கின்றன என்று மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா மிக வீரியமாக பரவி வருகிறது. நாட்டின் அனைத்து மாநிலங்களையும் பாரபட்சமில்லாமல் கொரோனா போட்டு தாக்கி வருகிறது.

தாக்கும் கொரோனா
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3,14,835 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 2,104 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். தற்போது செயல்பாட்டில் உள்ள பாதிப்புகளின் எண்ணிக்கை 22.91 லட்சத்தை தாண்டியுள்ளது, அதே வேளையில் நாட்டின் மொத்த இறப்பு எண்ணிக்கை 1,82,553 ஐ எட்டியுள்ளது.

146 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
இந்தியாவில் 146 மாவட்டங்களில் 15 சதவீதத்திற்கும் அதிகமான கொரோனா பாஸிட்டிவ் விகிதம் பதிவாகியுள்ளதாகவும், இது "கவலைக்குரிய அம்சம்' என்று மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்தார். 274 மாவட்டங்கள் 5-15 சதவீத பாஸிட்டிவ் பாதிப்பு தன்மையைப் பதிவு செய்துள்ளதாகவும் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள 146 மாவட்டங்களுடன் தொற்று நோயை கட்டுப்படுத்துவது குறித்து விரிவான ஆலோசனை நடத்தி வருவதாகவும் ராஜேஷ் பூஷன் தெரிவித்தார்.

மத்திய அரசின் குட் நியூஸ்
மே 1-ம் தேதி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் நிலையில் இந்த தடுப்பூசி பெறும் அளவுகள் குறித்து 15 நாட்களுக்கு முன்பே மத்திய அரசு மாநிலங்களுக்கு தெரிவிக்கும் என்றும் தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கும் தடுப்பூசி விலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் தெரிவித்தார். இது ஒருபுறம் இருக்க தடுப்பூசி போட்டவர்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு வருவது மிகமிகக் குறைவு என்று மத்திய அரசு நல்ல செய்தியை கொண்டு வந்துள்ளது.

மிக குறைந்த எண்ணிக்கை
இது தொடர்பாக சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மேலும் கூறுகையில், ' நாட்டில் செயல்பாட்டில் உள்ள இரண்டு தடுப்பூசிகளும் கடுமையான நோய் மற்றும் மரணத்தைத் தடுக்கின்றன. இந்த தடுப்பூசிகள் தொற்றுநோயைக் குறைக்கின்றன. தடுப்பூசிக்குப் பிறகு நமக்கு தொற்று ஏற்பட்டால், அது திருப்புமுனை தொற்று என்று அழைக்கப்படுகிறது. இது மிக மிக குறைந்த எண்ணிக்கையாகும். தடுப்பூசி போட்ட 10,000 பேரில் 2-4 நபர்களுக்கே மீண்டும் கொரோனா தொற்று ஏற்படுகிறது என்று தரவுகள் காட்டுகின்றன.

மகிழ்ச்சி கொடுக்கும் தரவுகள்
அதுவும் தடுப்பூசி போடப்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்னணி தொழிலாளர்கள் தொடர்ந்து கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும்போதுதான் தொற்று ஆளாகின்றனர். அதாவது கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்ற 10.03 கோடியில், 0.02 சதவீதம் (17,145) பேருக்கு மட்டுமே மீண்டும் பாஸிட்டிவ் என வந்துள்ளது. இரண்டு அளவுகளையும் பெற்ற 1.57 கோடி பேரில் 0.03 சதவீதம் (5,014) பேருக்கு மட்டுமே பாஸிடிவ் பாதிப்புகள் வந்துள்ளன. கோவாக்சின் தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்ற 93.56 லட்சத்தில் 0.04 சதவீதம் (4,208) பேருக்கு பாசிட்டிவ் பாதிப்பும், இரண்டு அளவுகளையும் பெற்ற 17.37 லட்சத்தில், 0.04 சதவீதம் (695) பேருக்கு மீண்டும் பாஸிடிவ் என கண்டறியப்பட்டுள்ளது என்று ராஜேஷ் பூஷன் தெரிவித்தார்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications