ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்.. தருண் அகர்வால் கமிட்டி விசாரணைக்கு கால நீட்டிப்பு
டெல்லி: மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் குழுவிற்கு கூடுதலாக ஒரு மாதம் கால அவகாசம் கொடுத்து, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான, ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று பொதுமக்கள் மாபெரும் போராட்டம் நடத்தினர்.
தமிழக அரசு நடத்திய துப்பாக்கி சூட்டில், 13 மக்கள் கொல்லப்பட்டனர். இதனால் தமிழகம் முழுக்க கடும் கொந்தளிப்பு ஏற்பட்டதால், மே 28ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
[வைகை அணை நீர் மட்டம் கிடு கிடு உயர்வு.. 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை]

வழக்கு
இதை எதிர்த்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையால் உண்மையிலேயே சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய, ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்தது. இந்த குழு விசாரணையை தொடங்கி தூத்துக்குடியில் ஆய்வுகளை மேற்கொண்டதோடு, மக்கள் கருத்துக்களையும் கேட்டறிந்தது.

தருண் அகர்வால் கமிட்டி
இந்த நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாய தலைவராக உள்ள ஏ.கே.கோயல் முன்னிலையில், தருண் அகர்வால் குழு சார்பில் தாக்கல் செய்த மனுவில், விசாரணை கால கெடுவை கூடுதலாக ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

கால நீட்டிப்பு
இதையேற்று, கூடுதலாக ஒரு மாதம் கால நீட்டிப்பு செய்து தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் ஏ.கே.கோயல் உத்தரவிட்டார். அக்டோபர் 30ம் தேதியுடன் இக்குழுவிற்கு காலக்கெடு முடிவடைய இருந்த நிலையில், அதை ஒரு மாதம் நீடித்து, நவம்பர் 30ம் தேதிவரை விசாரணை நடத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதித்துள்ளது.

விசாரணை வளையம்
பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்ய தேவை உள்ளதால், இம்மாத இறுதிக்குள், விரைந்து விசாரணையை முடிக்க முடியாது என்று, தருண் அகர்வால் குழு கேட்டுக்கொண்டதால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications