கூடங்குளம் சுற்று பகுதிகளில் குறிப்பிட்ட அளவிலேயே அணுக்கதிர் வீச்சு உள்ளது.. மத்திய அரசு
டெல்லி: கூடங்குளம் அணுமின் நிலைய வளாககத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்பட்டு அணுக்கழிவுகளை சேமிப்பதால், எந்த பாதிப்பும் இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா எழுப்பிய கேள்விக்கு மேற்கண்ட பதிலை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்துள்ளார். கூடங்குளத்தில் அணுக்கழிவு மேலாண்மை அமைப்பு கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருவதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் அணுக்கழிவு சேமித்து வைக்க அணுக்கழிவு மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான கருத்து கேட்பு கூட்டமும் நடத்தப்படும், மக்களின் கருத்தை கேட்டு பின் அவர்களது அச்சத்தை போக்கி அடுத்த சில ஆண்டுகளில் கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அணுக்கழிவு மையம் அமைப்பது தொடர்பாக ஜூலை 10-ம் தேதி கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்துவதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருந்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துது சமூக அமைப்புகள் அரசியல் கட்சிகள் என பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது, அதனால் கருத்து கேட்புக் கூட்டம் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அச்சம் தெரிவித்த சமூக ஆர்வலர்கள் அணுக்கழிவு மேலாண்மை குறித்த தொழில்நுட்பம் இந்தியாவில் இல்லை. அணு உலையை அமைப்பதிலிருந்து அணு கழிவை அப்புறப்படுத்தும் வரையிலும் தொடர்ச்சியாக மாசு ஏற்படும் என குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலுமே தமிழக எம்பிக்கள் கூடங்குளம் விவகாரத்தை கையில் எடுத்து சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். முன்னதாக நேற்று மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின் போது, கூடங்குளம் அணுக்கழிவுகளை அங்கேயே சேமித்து வைக்காமல், மனித நடமாட்டம் இல்லாத பாலைவன பகுதிகளில் சேமித்து வைக்க முடியுமா என தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.
இ,தற்கு பதிலளித்து பேசிய மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங், அணுக்கழிவு விவகாரத்தில் உலகம் முழுவதிலும் பின்பற்றப்படும் நடைமுறைதான் இந்தியாவிலும் பின்பற்றப்படுகிறது. கூடங்குளம் மட்டுமல்ல நாட்டின் மற்ற அணு உலைகளிலும் இதே நடைமுறை தான் பின்பற்றப்படுகிறது. இது பாதுகாப்பானது முறை தான் என்றார்.
இந்நிலையில் மாநிலங்களவையில் கூடங்குளம் விவகாரம் மற்றும் பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருள் குறித்து, சசிகலா புஷ்பா எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துபூர்வமாக பதில் தாக்கல் செய்துள்ளார். அதில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உருவாகும் அணுக்கழிவுகளை சேமிப்பதால் எவ்வித பாதிப்பும் இல்லை.
இந்த அணுக்கழிவுகள் சரியான முறையில் பதப்படுத்தப்பட்டு, பின்னர் பாதுகாப்பான முறையில் தான் சேமிக்கப்பட்டு வருகிறது. ஆகவே கூடங்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அணுக்கதிர் வீச்சு குறிப்பிட்ட அளவிலேயே உள்ளது என கூறியுள்ளார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications