"நேரம் வந்துவிட்டது! வரலாறு முக்கியம்.." ஞானவாபி மசூதி விவகாரம்.. ஆர்எஸ்எஸ் பரபர கருத்து
டெல்லி: உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஞானவாபி மசூதி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்,
உத்தரப் பிரதேசம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் இந்த மசூதி கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், இங்கிருந்த இந்து கோயில் ஒன்றை இடித்துவிட்டே அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் இந்த ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாக ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

ஞானவாபி மசூதி
மேலும், இந்த ஞானவாபி மசூதி வளாகத்தின் வெளிப்புறச் சுவரில், சிங்கார கவுரி அம்மன் சிலை அமைந்து உள்ளது. இந்த சிலைக்கு ஆண்டுக்கு ஒரு முறை பூஜைகளும் நடத்தப்படுகிறது. இதனிடையே இந்த அம்மன் சிலைக்குத் தினமும் பூஜை நடத்த அனுமதிக்கக் கோரி, வாரணாசி நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம், ஐந்து இந்து பெண்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி ஞானவாபி மசூதியில் வீடியோ உடன் கூடிய ஆய்வு நடத்தப்பட்டது.

ஆர்எஸ்எஸ் கருத்து
இதனிடையே ஆர்எஸ்எஸ் அமைப்பினர் இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆர்எஸ்எஸ் அமைப்பின் விளம்பரப் பொறுப்பாளர் சுனில் அம்பேத்கர், "இப்போது தான் சில உண்மையான தகவல்கள் வெளி வர தொடங்கி உள்ளது. அனைத்து உண்மைகளும் வெளியே வர வேண்டும் என்பதே எனது விருப்பம். உண்மையை எத்தனை நாட்கள் தான் மறைக்க முடியும். அது கண்டிப்பாக ஒரு நாள் வெளியே வந்துவிடும்

நேரம் வந்துவிட்டது
நமது சமூகத்தின் முன் வரலாற்று உண்மைகளைச் சரியான கண்ணோட்டத்தில் முன்வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றே நான் கருதுகிறேன்" என்று அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் சஞ்சீவ் பல்யானும் இதே கருத்தைத் தெரிவித்தார். மசூதி வளாகத்தில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதை அறிந்ததும், தான் கண் கலங்கிவிட்டதாக அவர் தெரிவித்தார்.

முக்கியம்
இதில் ஆர்எஸ்எஸின் அம்பேத்கர் கூறியுள்ள கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால், ராம ஜென்ம பூமி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த போதே ஞானவாபி மசூதி மற்றும் மதுரா கிருஷண்ன ஜென்ம பூகி குறித்த பேச்சுகளும் எழுந்தன. அப்போது அவர்களுக்குப் பதிலளித்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், "வரலாற்றுக் காரணங்களுக்காகச் சங்கம் இந்த (ராமஜென்ம பூமி) இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டது. இது ஒரு விதிவிலக்கு. நாட்டின் வளர்ச்சிக்காக இப்போது அனைவரும் மீண்டும் இணைந்து செயல்படுவோம்" என்றார்.
Recommended Video

காசி விஸ்வநாதர் கோயில்
மோகன் பகவத் அப்போது அப்படிக் கூறி இருந்த நிலையில், ஞானவாபி மசூதி விவகாரத்தில் சுனில் அம்பேத்கரின் கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஞானவாபி மசூதி உலகப் புகழ் பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்கு மிக அருகே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications