சட்டமன்ற தேர்தல்! இளைஞர்களே.. திரண்டு வாருங்கள்! தமிழ்நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!
டெல்லி: தமிழ்நாட்டில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், மையங்களை நோக்கி வாக்காளர்கள் படையெடுத்துள்ளனர். இந்நிலையில் தமிழ்நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
அவர் தனது x பக்கத்தில், "தமிழ்நாட்டு மக்கள் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க உள்ள வேளையில், அனைத்து வாக்காளர்களும் மிகுந்த உற்சாகத்துடன் இந்த புனிதமான ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக, தமிழ்நாட்டின் இளைஞர்களும், பெண்களும் பெருமளவில் திரண்டு வந்து, சாதனை அளவிலான வாக்குகள் பதிவாக வழிவகை செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்" என பதிவிட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் பாஜக, அதிமுக தலைமையிலான கூட்டணியில் களமிறங்கியிருக்கிறது. கூட்டணியில் அதிமுக 178 இடங்களிலும், பாஜக 27 இடங்களிலும் போட்டியிடுகின்றன. கடந்த 2021 தேர்தலை விட இம்முறை பாஜகவிற்கு 7 இடங்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி தமிழ்நாட்டில் தீவிர பரப்புரை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் தற்போது வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications