இப்படி கூட சாவு வருமா.. 25வது திருமண விழாவில் ஆட்டம் போட்ட தொழிலதிபர்.. சரிந்து விழுந்து உயிரிழப்பு
டெல்லி: இந்த காலத்தில் எப்படி யாருக்கு மரணம் வரும் என்பது தெரிவதில்லை. நல்ல சந்தோஷமாக ஆட்டம் பாட்டத்துடன் மகிழ்ச்சியாக இருப்போருக்கும் கூட திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. நொடியில் ஏற்படும் இதுபோன்ற மரணங்கள் ஒட்டுமொத்த குடும்பத்தினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. இப்போது அதுபோன்ற ஒரு அதிர்ச்சி சம்பவம் தான் நடந்துள்ளது.
முன்பெல்லாம் மாரடைப்பு என்பது அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாகவே ஏற்பட்டு வந்தது. ஆனால், இப்போது நல்ல உடல்நிலையில் இருப்போருக்குக் கூட திடீரென மாரடைப்பு ஏற்படுகிறது. நொடியில் உயிரிழக்கிறார்கள். இப்படி கூட சாவு வருமா என நாம் யோசிக்காத வழிகளிலும் கூட மரணங்கள் ஏற்படுகிறது. அப்படியொரு ஷாக் சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

25ஆவது ஆண்டு விழா
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் ஒரு தம்பதியினர் தங்கள் 25வது திருமண ஆண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டு இருந்தனர். ஆனால், அந்த கொண்டாட்டமே அவர்களுக்குத் துக்கமாக மாறியது. திருமண விழா கொண்டாட்டத்தின்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் அந்த இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் 50 வயதான வாசிம் சர்வத். இவர் அங்கு பிரபல ஷூ தொழிலதிபராக இருக்கிறார். இவரது மனைவி ஃபரா. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிறது. 25ஆவது திருமண விழாவை கோலாகலமாக கொண்டாடத் திட்டமிட்ட இந்த ஜோடி, இதற்காக பிலிபிட் பைபாஸ் சாலையில் தேவையான ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
கோலாகலமாகக் கொண்டாட்டம்
25வது ஆண்டு திருமண விழா என்பதால் வெகு சிறப்பாகக் கொண்டாட்டங்களை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் அழைப்பிதழைக் கொடுத்து அழைத்துள்ளனர். திருமண விழாவும் கூட தொடங்கி கோலாகலமாகவே கொண்டாட்டங்கள் நடந்துள்ளன.
அப்போது அந்த ஜோடியும் அவர்களது குடும்பத்தினரும் பாரம்பரிய உடைகளை அணிந்து, மேடையில் நடனமாடிக் கொண்டு இருந்தனர்.. வாசிம்- ஃபரா தம்பதி மேடையில் நடனமாடிக் கொண்டு இருந்த நிலையில், திடீரென வாசிம் மேடையிலேயே மயங்கி விழுந்தார்.
மாரடைப்பால் மரணம்
ஃபராவும் உறவினர்களும் வாசிமை நோக்கி விரைந்தனர். அவரை எழுப்ப முயன்றனர். ஆனாலும் முடியவில்லை. இதையடுத்து உடனடியாக அவரை மீட்ட குடும்பத்தினர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும், சிகிச்சை பலனில்லாமல் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதை அவர்கள் குடும்பத்தினரால் நம்பவே முடியவில்லை. சற்று நேரத்திற்கு முன்பு குடும்பத்தினருடன் ஜாலியாக ஆட்டம் பாட்டம் என இருந்தவர் இப்படி உயிரிழந்துவிட்டதைப் பார்த்து அதிர்ந்து போனார்கள். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
-
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை












Click it and Unblock the Notifications