இப்போது இந்தியா பெயரை கேட்டாலே.. பதறியடித்து ஓடும் உலக நாடுகள்.. என்ன காரணம் தெரியுமா?
டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருவதால் பல்வேறு உலக நாடுகள் இந்தியாவுக்கான விமான சேவையை அதிரடியாக ரத்து செய்துள்ளது.
அடுத்த 30 நாட்களுக்கு இந்தியாவுக்கு விமானங்கள் இயக்கப்படாது என்று கனடா அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

இந்தியா முதலிடம்
இந்தியாவில் கொரோனா தொற்று உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு கட்டுக்கடங்காமல் மிக அதிவேகமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பில் முதலிடம் வகித்து வந்த அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடம் பிடித்துள்ளது.

பெயரை கேட்டாலே அதிருதுல்ல
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3.32 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 2263 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் தொற்று ஜெட் வேகத்தில் பரவி வருவதால் பல்வேறு பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு காலடி எடுத்து வைக்கவே பதறுகின்றன. இந்தியாவின் பெயரை கேட்டாலே மற்ற நாட்டு மக்கள் அஞ்சும் நிலையில்தான் நமது நாடு இருக்கிறது.

விமானங்கள் ரத்து செய்த நாடுகள்
இந்தியாவுக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியாவில் இருந்து துபாய்க்கு இயக்கப்படும் விமானங்களின் சேவை ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.இந்தியா - இங்கிலாந்து இடையிலான விமான சேவை நாளை முதல் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா கூறியுள்ளது.

கனடா அதிரடி தடை
இந்தியாவுடனான விமான சேவையை மே 3-ம் தேதி வரை ஹாங்காங் ரத்து செய்துள்ளது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளும் இந்தியாவுக்கான விமான சேவையை ஏற்கனவே ரத்து செய்துள்ளன. இந்த நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து விமானங்கள் வர கனடா அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. அடுத்த 30 நாட்களுக்கு இந்தியாவுக்கு விமானங்கள் இயக்கப்படாது என்று கனடா கூறியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications