'அமைச்சராகவே இருந்தாலும், ஆக்சிஜனை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'.. டெல்லி அரசு உறுதி
டெல்லி: தலைநகரில் ஆக்சிஜனை பதுக்கியதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ இம்ரான் உசேன் மீதான விசாரணையில் ஆஜரான டெல்லி அரசு வழக்கறிஞர், ஆக்சிஜனை பதுக்குவதாக இம்ரான் உசேனாக இருந்தாலும் சரி, கவுதம் கம்பீராக இருந்தாலும் சரி நிச்சயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
டெல்லியில் கொரோனா பரவலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. அங்குள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டுள்ளது.
தலைநகரில் பெரும்பாலான மருத்துவமனைகளில் சில மணி நேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் மட்டுமே இருப்பதாக மருத்துவமனை நிர்வாகங்கள் கூறி வருகின்றன. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகப் பொதுமக்கள் உயிரிழக்கும் நிகழ்வுகளும் நடந்துள்ளன.

ஆக்சிஜனை பதுக்கிய இம்ரான் உசேன்
இந்நிலையில், மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை கடுமையாக இருக்கும்போது ஆம் ஆத்மி எம்எல்ஏ இம்ரான் உசேன் ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கி, முறைகேடாக விநியோகித்து வருவதாகவும் வழக்கறிஞர் ஒருவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இது குறித்து விளக்கம் அளிக்குமாறு இம்ரான் உசேன் மற்றும் ஆம் ஆத்மி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வழக்கு விசாரணைக்காகத் திங்கள்கிழமை ஆஜராகுமாறும் இம்ரான் உசேனிடம் உத்தரவிட்டனர். இம்ரான் உசேன் டெல்லி அமைச்சரவையில் உணவு மற்றும் சிவில் சப்ளே அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிபதிகள் கருத்து
மேலும், நீதிபதிகள் கூறுகையில், அவர் டெல்லியிலிருந்து ஆக்சிஜனை பெறவில்லை என்றால்; அவர் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சொந்தமாக ஆக்சிஜனை இறக்குமதி செய்தால், அப்போது அவர் மீது நீங்கள் குற்றஞ்சாட்ட முடியாது. ஏனென்றால், அப்போது அவர் டெல்லிக்கு தேவையான ஆக்சிஜன் சப்ளேவை அதிகப்படுத்தியதாகவே கருத முடியும். அதேநேரம் அவர் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் ஆக்சிஜன் சிலிண்டர்களை விநியோகம் செய்தால் மட்டுமே அது மிகப் பெரிய தவறு என்றனர்.

யாருக்கு விநியோகம்
அவர் ஆக்சிஜன் சிலிண்டர்களை தேவையான நபர்களுக்குத் தான் விநியோகம் செய்கிறாரா என்பதை விசாரணை செய்ய வேண்டும் என்ற மனுதார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. அவர் டெல்லி மருத்துவமனைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆக்சிஜனை எடுக்கவில்லை என்றால் அவர் யாருக்கு விநியோகம் செய்கிறார் என்பது குறித்து விசாரணை செய்யப்போவதில்லை என்று தெரிவித்தனர்.

கடும் நடவடிக்கை
டெல்லி அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், அவர் (அமைச்சர் இம்ரான் உசேன்) தவறு செய்திருந்தார் என்றே வைத்துக்கொள்ளுங்கள். அப்போதும் இது குறித்து போலீசிலேயே முதலில் புகார் அளிக்கப்பட வேண்டும். போலீசார் தான் இது குறித்து விசாரணை செய்ய வேண்டும். ஆக்சிஜன் பதுக்குவது யாராக இருந்தாலும், அது எம்எல்ஏ இம்ரான் உசேனாக இருந்தாலும் சரி, கவுதம் கம்பீராக இருந்தாலும் சரி நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications