Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாடாளுமன்றத்தில் 'ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா'வை பாஜகவால் எளிதாக நிறைவேற்றவே முடியாது- ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை பாஜகவால் எளிதாக நிறைவேற்றிவிட முடியாது என்பதை அக்கட்சி உணர்ந்துதான் தற்போது நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு அனுப்புவோம் என்கிற முடிவை எடுத்திருக்கிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 3-ல் 2 பங்கு பெரும்பான்மை என்பது நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் இல்லை என்பதால் பாஜக இந்த முடிவை எடுத்துள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை அமல்படுத்தியே தீருவோம் என்பது பாஜகவின் கொள்கை முடிவு. இது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் பரிந்துரைகளுக்கு சில மாதங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதலும் அளித்தது.

one nation one election parliament

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி பல்வேறு கூட்டங்களில் பேசுகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்படுத்தப்படும் என கூறி வந்தார். நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே இந்த மசோதா தாக்கல் செய்யப்படப் போகிறது எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் இந்த மசோதாவை தாக்கல் செய்யாமல் மத்திய அரசு காலம்தாழ்த்தி வந்தது.

இந்த நிலையில் இன்று லோக்சபாவில் மத்திய அமைச்சர் அர்ஜூன் மேக்வால், ஒரே நாடு ஒரே மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதாவை தொடக்க நிலையிலேயே அனைத்து எதிர்க்கட்சிகளும் மிகக் கடுமையாக எதிர்த்தன. எதிர்க்கட்சிகளின் உக்கிரமான எதிர்ப்பைத் தொடர்ந்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இம்மசோதா மீது விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும்; இதற்காக நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதுதான் பிரதமரின் விருப்பம்; இதனையே எதிர்க்கட்சிகளும் விரும்புகின்றனர் என்றார். இதனையடுத்து இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் கூட்டுக் குழு விசாரணை நடத்த 269 பேர் ஆதரவு தெரிவித்தனர்; 198 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். பெரும்பாலான எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றன.

லோக்சபாவில் எடுத்த எடுப்பிலேயே நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்ப மத்திய பாஜக அரசு ஒப்புக் கொண்டதற்கும் காரணம் இருக்கிறது. ஏனெனில் திமுகவின் டிஆர் பாலு எம்பி பேசுகையில், பாஜக கூட்டணி அரசுக்கு 3-ல் 2 பங்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் எப்படி மசோதாவை தாக்கல் செய்ய முடியும் என கேள்வி எழுப்பி இருந்தார். இந்த கேள்வி மிகவும் சரியானதுதான்.

நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றுவதற்கு 3-ல் 2 பங்கு பெரும்பான்மையை மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு பெற்றிருக்க வேண்டும். அதாவது லோக்சபாவில் பாஜக கூட்டணிக்கு மொத்தம் 362 எம்.பி.க்கள் வாக்கு தேவை. ஆனால் பாஜக கூட்டணிக்கு ஆதரவு மொத்தமே 298 எம்.பிக்கள் மட்டுமே.

ராஜ்யசபாவில் பாஜகவுக்கு தேவை 158 எம்.பிக்கள். ஆனால் பாஜக கூட்டணிக்கான ஆதரவு எம்பிக்கள் எண்ணிக்கை 135 மட்டுமே. இரு சபைகளிலும் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மைக்கு அதிகமான எம்பிக்களின் ஆதரவு தேவை. என்னதான் ஒரு சில கட்சிகள் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தாலும் கூட தேவையான பெரும்பான்மை ஆதரவு கிடைத்துவிடாது. ஆகையால் இந்தியா கூட்டணியின் ஆதரவு இல்லாமல் மசோதாவை நிறைவேற்றவே முடியாது. இதனை உணர்ந்தே கூட்டுக் குழுவின் விசாரணைக்கு அனுப்பி வைக்கும் திட்டத்தை நிறைவேற்றுகிறது மத்திய பாஜக அரசு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+