ஒன்ஸ் மோர் ப்ளீஸ்.. காட்டில் பார்வதியிடம் கேட்ட சக்திவேல்.. கடைசியில் நடந்தது கொலை

Subscribe to Oneindia Tamil

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்து விட்டு மீண்டும் ஒரு முறை உடலுறவுக்கு கள்ளக்காதலி மறுத்துவிட்டார்.

தருமபுரி மாவட்டம் சித்தேரியை அடுத்த வெள்ளாம்பள்ளியை சேர்ந்தவர் பார்வதி (32). 9 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்துவிட்டார். இரு குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் அவருக்கு அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் (42) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் கள்ளக்காதலாக மாறியது.

காப்புக் காடு

காப்புக் காடு

இருவரும் அடிக்கடி காப்புக் காட்டு பகுதிக்கு சென்று தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். அந்த வகையில் வழக்கம் போல் சக்திவேல் பார்வதியை அரூருக்கு வரவழைத்து அரூரில் இருந்து இரு சக்கர வாகனத்தில் இருவரும் கீழானூர் காப்பு காட்டுக்கு சென்றனர். அப்போது இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

இரண்டாவது முறை

இரண்டாவது முறை

இந்த நிலையில் இரண்டாவது முறையாக சக்திவேல் பார்வதியை உல்லாசத்திற்கு வருமாறு அழைத்தார். தனக்கு உடல் ஒத்துழைக்கவில்லை. அதனால் இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் என கூறி பார்வதி மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சக்திவேல் , பார்வதியை தரக்குறைவான வார்த்தைகளால் பேசியுள்ளார். பதிலுக்கு பார்வதியும் கடும் சொற்களை பயன்படுத்தியுள்ளார்.

பார்வதியை மிரட்டிய சக்திவேல்

பார்வதியை மிரட்டிய சக்திவேல்

ஒரு கட்டத்தில் பார்வதியை சமாதானப்படுத்திய சக்தி வேல் மீண்டும் ஒரு முறை உல்லாசமாக இருக்க கேட்டுள்ளார். ஆனால் பார்வதி மறுக்கவே ஆத்திரமடைந்த சக்திவேல், மறைத்து வைத்திருந்த இரும்பு ராடை எடுத்தார். இரும்பு ராடை காட்டி ஒழுங்கா நான் சொல்ற மாதிரி கேளு. இல்லாட்டி கொன்றுவிடுவேன் என சக்திவேல் மிரட்டியுள்ளார்.

மறுத்த பார்வதி

மறுத்த பார்வதி

அதற்கு பார்வதி என்னால் முடியாது. உன்னால் ஆனதை பார்த்துக்கோ என கூறிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் இரும்பு ராடால் பார்வதியின் தலையில் அடித்து முகத்தை சிதைத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த பார்வதி அதே இடத்திலேயே பலியானார். இதையடுத்து சக்திவேல் அங்கிருந்து சென்றுவிட்டார்.

 2ஆவது மனைவி

2ஆவது மனைவி

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் 2ஆவது மனைவி வீட்டில் பதுங்கி இருந்த சக்திவேலை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தந்தையும் இல்லாமல் தாயையும் இழந்து பார்வதியின் இரு குழந்தைகளும் கதறும் காட்சி காண்போரை உருக்கியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+