Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தலைவர் ஸ்டாலின் சொல்லிட்டாரு.. பட்டிவீரன்பட்டி பேரூராட்சி தலைவி பதவியை ராஜினாமா செய்த கல்பனா தேவி

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல் : தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திமுகவினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி பேரூராட்சி தலைவர் பதவியை திமுக கவுன்சிலர் கல்பனா தேவி என்பவர் ராஜினாமா செய்துள்ளார்.

நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர், நகராட்சி துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை தங்களின் கூட்டணிக் கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு திமுக தலைமை ஒதுக்கியது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற மறைமுக தேர்தலின் போது கட்சித்தலைமை அறிவிப்பை மீறி ஏராளமான இடங்களில் திமுகவினர், கூட்டணி கட்சிகளுக்கு எதிராக போட்டியிட்டு தலைவர் துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை கைப்பற்றினர்.

கட்சிகள் கோரிக்கை

கட்சிகள் கோரிக்கை

கூட்டணி தர்மத்தை மீறி திமுகவினர் செயல்படுவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இதே போல பல சம்பவங்கள் நடைபெற்றது. இந்நிலையில் தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் கழக தலைமை அறிவித்ததை மீறி போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும் என திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஸ்டாலின் அறிக்கை

ஸ்டாலின் அறிக்கை

கழகத் தலைவர் என்ற முறையில் குற்ற உணர்ச்சியால், நான் குறுகி நிற்கிறேன். எந்தத் தோழமை உணர்வு நமக்கு மக்கள் மனதில் நல்லெண்ணம் உருவாக்கியதோ அந்த தோழமை உணர்வை எந்தக் காலத்திலும் உருக்குலைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். கழகத் தலைமை அறிவித்ததை மீறி தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும். விலகாவிட்டால் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று கழகத் தலைவர் என்ற முறையில் எச்சரிக்கிறேன் எனவும் முதல்வர் ஸ்டாலின் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருந்தார்.

கூட்டணியினர் வரவேற்பு

கூட்டணியினர் வரவேற்பு

இதற்கு கூட்டணிக் கட்சிகள் வரவேற்பு தெரிவித்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் திமுகவினர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் விடுத்தனர். நேற்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர்மன்ற துணைத்தலைவர் பதவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் அங்கு வென்ற திமுக கவுன்சிலர் பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதேபோன்ற தமிழகத்தில் தொடர்ந்து பலரும் ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

ராஜினாமா செய்த பெண் கவுன்சிலர்

ராஜினாமா செய்த பெண் கவுன்சிலர்

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்திலும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் உத்தரவை ஏற்று பேரூராட்சி பதவியை திமுக பெண் கவுன்சிலர் ஒருவர் ராஜினாமா செய்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி பேரூராட்சி தலைவர் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் பதவி ஒதுக்கப்பட்ட நிலையில் திமுக சார்பில் போட்டியிட்டு ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக கவுன்சிலர் கல்பனா தேவி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்தார் . பட்டிவீரன்பட்டி பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் உமா சுந்தரியிடம் அவர் தன் ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+