Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Exclusive: தொடர் நாயகன் விருது! பாபர் ஆசமை ஓரங்கட்டியதன் பின்னணியில் பிசிசிஐ? வெடித்தது சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

துபாய்: டேவிட் வார்னருக்கு உலக கோப்பை தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    Warnerக்கு Player of the Tournament! சர்ச்சை வெடித்தது | T20 WC 2021 | OneIndia Tamil

    2021 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து நேற்று மோதின.

    துபாய் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று முதல் முறையாக டி20 உலக கோப்பையை வென்றது.

    ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடிய வார்னருக்கு பார்மில் இல்லை என்று கூறி கேப்டன் பொறுப்பை பிடுங்கியது அணி நிர்வாகம். மேட்சை விட்டும் வெளியே வைக்கப்பட்டவர் டேவிட் வார்னர். கனே வில்லியம்சன் அந்த அணி கேப்டனாக்கப்பட்டார்.

    டேவிட் வார்னர் அதிரடி

    டேவிட் வார்னர் அதிரடி

    நேற்றைய போட்டியில் அதே கனே வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்துக்கு எதிராக விட்டு விளாசி அரை சதம் கடந்து ஆஸ்திரேலியா பக்கம் மேட்சை கொண்டு வந்தார் டேவிட் வார்னர். அதுமட்டுமல்ல, இந்த தொடர் முழுக்கவே சிறப்பாக ஆடியுள்ளார் அவர். அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக 49 ரன்கள் எடுத்தார். டி20 உலக கோப்பை தொடரில் மொத்தம், 289 ரன்களை டேவிட் வார்னர் எடுத்துள்ளார்.

    பாபர் ஆசம்தான் அதிக ரன்கள்

    பாபர் ஆசம்தான் அதிக ரன்கள்

    இந்த நிலையில்தான், பிளேயர் ஆப் தி டோர்னமன்ட் விருது டேவிட் வார்னருக்கு வழங்கப்பட்டது. இதில்தான் சர்ச்சை எழுந்துள்ளது. ஏனெனில், உலக கோப்பை தொடரில், அதிக ரன்கள் குவித்தது பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம். அவர் 303 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 60.60 ஆகும். டேவிட் வார்னர் 289 ரன்கள் எடுத்திருந்தார். சராசரி 48.16 ஆகும். பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் இதில் 3வது இடத்தில் உள்ளார். 70.25 என்ற சராசரியுடன், 281 ரன்கள் குவித்துள்ளார் அவர். இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் 269 ரன்களும், இலங்கையின் அசலங்கா 231 ரன்களும் குவித்து, டாப் 5 பேட்ஸ்மேன்கள் லிஸ்டில் உள்ளனர்.

    பாகிஸ்தான் ரசிகர்கள்

    பாகிஸ்தான் ரசிகர்கள்

    பாபர் அசாம் முதலிடம் பிடித்த போதிலும், தொடர் நாயகன் விருது டேவிட் வார்னருக்கு வழங்கப்பட்டதை பாகிஸ்தான் நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகிறார்கள். ஐசிசி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நெருக்கடியால் பாபர் அசாமுக்கு விருது தரவில்லை என்று சொல்லக் கூடிய அளவுக்கு பாகிஸ்தான் ரசிகர்கள் போய் விட்டார்கள்.

    முதல் முறை இல்லை

    முதல் முறை இல்லை

    இருப்பினும், பிளேயர் ஆப் தி சீரிஸ் என்பது ரன் குவிப்பை அடிப்படையாக வைத்தது கிடையாது. இதற்கு உதாரணம் உள்ளது. 2019ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பையில் இந்தியாவின் ரோகித் சர்மாதான் டாப் ஸ்கோரர். அவர் மொத்தம், 648 ரன்கள் குவித்தார். ஆனால் தொடர் நாயகன் விருது, நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்சனுக்கு கொடுக்கப்பட்டது. அவர் எடுத்த ரன்கள் 578.

    தொடர் நாயகன் யாருக்கு?

    தொடர் நாயகன் யாருக்கு?

    2019 உலக கோப்பையில் இங்கிலாந்து-நியூசிலாந்து இறுதிப் போட்டியில் மோதின. சூப்பர் ஓவர் வரை போன போட்டியில் இங்கிலாந்து வென்று சாம்பியனானது. அதாவது இறுதிப் போட்டி வரை அல்லது சாம்பியன் பட்டம் வெல்ல வைக்கும் அளவுக்கு போகும் அணியைச் சேர்ந்த அதிக ரன் குவித்த வீரருக்குதான் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது. எனவே டேவிட் வார்னருக்கு விருது கொடுக்கப்பட்டதில் பெரிய ஆச்சரியம் இல்லை என்கிறார்கள் கிரிக்கெட் புள்ளி விவர நிபுணர்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+