சென்னையை தொடர்ந்து ஈரோட்டில் ’பகீர்’.. ஜெயிலில் தள்ளிய ஆத்திரத்தில் மாணவியின் கழுத்தை அறுத்த இளைஞர்!
ஈரோடு : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகரில் பள்ளி மாணவியின் கழுத்தை பிளேடால் அறுத்து கொலை செய்ய முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தான் காதலித்து வந்த அந்த மாணவியால், தான் ஜெயிலுக்குப் போக நேர்ந்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில், ஜாமீனில் வந்து அந்தப் பெண்ணைக் கொல்ல முயன்றுள்ளார் அந்த இளைஞர்.
காதலை ஏற்றுக்கொள்ளாத பெண் மீது வன்முறைத் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் சென்னையில், தன்னை திருமணம் செய்ய மறுத்த பெண்ணை, ரயில் முன் தள்ளிவிட்டு இளைஞர் கொலை செய்த நிலையில், காதல் விவகாரத்தில் தன்னை சிறையில் தள்ளியதற்காக மாணவியை கொலை செய்ய முயன்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி கழுத்தை அறுத்த இளைஞர்
சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகரில் வசிக்கும் கண்ணம்மாள் என்பவரது மகள் ஸ்வேதா (16). ஸ்வேதா, சத்தியமங்கலத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளியில் இருந்து பேருந்தில் பவானிசாகர் திரும்பி, பேருந்து நிலையத்திலிருந்து தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, இளைஞர் ஒருவர் திடீரென மாணவி ஸ்வேதாவின் கழுத்தை, தனது கையில் வைத்திருந்த பிளேடால் அறுத்துள்ளார்.

பிளேடால் அறுத்து
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் ஓடிச்சென்று தடுக்க முயன்றுள்ளனர். உடனே அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பிளேடால் அறுக்கப்பட்டதில் காயமடைந்து ரத்தம் வழிய நின்ற மாணவி ஸ்வேதாவை அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

நவீன்குமார்
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பவானிசாகர் போலீசார், மாணவியின் கழுத்தை பிளேடால் அறுத்துவிட்டு தப்பிச் சென்ற இளைஞர் பற்றி விசாரணை நடத்தியதில் மாணவியை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற இளைஞன் பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் நவீன்குமார் என்பது தெரியவந்தது.

காதல் தகராறு
நவீன் குமார், மாணவி ஸ்வேதாவை காதலித்து வந்துள்ளார். தனது காதலை அவரிடம் சொன்ன நிலையில், ஸ்வேதாவின் பெற்றொருக்கு இந்த விவகாரம் தெரிந்து, போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மாணவிக்கு தொல்லை கொடுத்த நவீன்குமாரை போலீசார் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர்.

கைது
இதையடுத்து, ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்த நவீன் குமார், தன்னை மாட்டிவிட்டு ஜெலிலில் அடைத்த ஸ்வேதாவை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில், அவரை பின் தொடர்ந்து சென்று, கழுத்தில் பிளேடால் அறுத்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. இதையடுத்து, நவீன்குமாரை வலைவீசித் தேடிய போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர். தொடர்ந்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications