என்ன ஒரு பைத்தியகாரத்தனம்.. கவரில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள்.. ஓசூரில் ஷாக்
ஓசூர்: ஓசூரில் கட்டிடத்தொழிலாளி மன உளைச்சலால் நாக்கை கத்தியால் வெட்டிக்கொண்ட நிலையில், துண்டான நாக்கை ஒட்ட வைக்க கவரில் அவரது பிள்ளைகள் எடுத்துவந்தனர்.
Recommended Video
ஆனால் துண்டான நாக்கில் ரத்த ஓட்டம் இல்லாததால் அதை இணைத்தாலும் தோல்வி தான் என்றும் பேசுவதற்கு பிரச்சனை இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, வசந்த் நகரில் குடியிருந்து வருபவர் முருகேசன்(58). கட்டிடதொழிலாளியான இவருக்கு மனைவி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

நாக்கை வெட்டினார்
எப்போதும் மன உளைச்சல், வேதனையுடன் பிறரிடம் பழகாமல் தனித்து இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை கத்தியால் தனது நாக்கை தானே வெட்டிக்கொண்டுள்ளார். துண்டான நாக்கை கவரில் எடுத்து வந்த முருகேசனின் பிள்ளைகள், ஒசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

பிள்ளைகள் விளக்கம்
முருகேசனின் பிள்ளைகள் கூறுகையில், நேற்று முன்தினம் முதல் சைக்கோ மனிதனை போல திரிந்து வந்ததாகவும் நேற்று காலை யாரும் எதிர்பாராத விதமாக நாக்கை துண்டித்துக்கொண்டார்.

பேசுவதில் பிரச்சனை இல்லை
பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் துண்டான நாக்கில் இரத்த ஓட்டம் இல்லாததால் இணைக்கும் பணி செய்தாலும் அது தோல்வி தான் என்றும் பேசுவதற்கு பிரச்னை இல்லை என்றும் கூறினார்கள் என்றார்கள்.

சைக்கோ
மன உளைச்சல் காரணமாக நாக்கை துண்டு துண்டாக கூலித்தொழிலாளி வெட்டிக்கொண்டது ஓசூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காவல்துறையில் புகார் ஏதும் அளிக்கப்பட்டதாக தெரியவில்லை. சைக்கோதனமான மனநிலையில் இப்படியும் சிலர் செய்வது ஆங்காங்கே நடக்கிறது.












Click it and Unblock the Notifications