ஆத்தாடி.. மகனை விட மருமகள் செம.. இது கேசிஆர் வீட்டு சமாச்சாரம்!
ஹைதராபாத்: தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் மருமகளுக்கு அவரது மகனை காட்டிலும் அதிக சொத்து இருப்பதாக பிரமாணப்பத்திரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநில சட்டசபைக்கு வரும் டிசம்பர் 9-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் தலைவரும் மாநில முதல்வரும் வேட்புமனு தாக்கல் செய்தார். அதில் தன் குடும்பச் சொத்து விவரங்களை பட்டியலிட்டுள்ளார்.

தனது மகனும் மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான கே டி ராமா ராவுக்கு ரூ. 4.93 கோடி சொத்து உள்ளதாக கேசிஆர் குறிப்பிட்டுள்ளார். அதுபோல் ராமாராவின் மனைவியும் தனது மருமகளுமான ஷைலிமாவுக்கு ரூ. 35.98 கோடி சொத்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலத்துக்கே முதல்வராக உள்ள சந்திரகேகர ராவிடம் சொந்தமாக ஒரு ஓட்ட அம்பாசிடர் கார் கூட இல்லை என வேட்புமனுவில் தாக்கல் செய்துள்ளார். மேலும் தான் ஒரு விவசாயி என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் குறிப்பிட்டுள்ள வேட்புமனுவை பார்க்கும் போது கேசிஆரின் மகனை காட்டிலும் அவரது மருமகளுக்கு 8 மடங்கு சொத்து அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதுபோல்தான் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை விட அவரது பேரனுக்கு அதிக சொத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications