மோடி அரசின் புதிய சட்டத்தால், 18 லட்சம் பெண்கள் வேலை இழக்க கூடும்.. எச்சரிக்கை சர்வே!
Recommended Video

டெல்லி: மோடி அரசு கொண்டு வந்துள்ள பேறு கால விடுப்பு தொடர்பான புதிய சட்டம் காரணமாக இந்தியாவில், சுமார் 18 லட்சம் பெண்கள் வேலைவாய்ப்பை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது என்கிறது ஒரு சர்வே.
12 வாரங்களாக (3 மாதங்கள்) இருந்த, சம்பளத்துடன் கூடிய பேறு கால விடுமுறை நாட்களை, 26 வாரங்களாக அதிகரித்து சட்டம் இயற்றியுள்ளது மத்திய அரசு.
கனடா, நார்வே போன்ற நாடுகளுக்கு பிறகு, மகப்பேறு காணும் மகளிருக்கு அதிக நலன் பயக்கும் ஒரு சட்டமாக இது பார்க்கப்பட்டது. ஆனால், அது வேறு விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறுகிறது டீம்லீஸ் சர்வீசஸ் லிமிட்டட் (TeamLease Services Ltd) என்ற நிறுவனம் நடத்திய சர்வே.

18 லட்சம் வேலை
அந்த சர்வே மேலும் கூறுவதை பாருங்கள்: 2019ம் ஆண்டுக்குள் மொத்தம் 10 துறைகளில் அதிகபட்சமாக, 1.8 மில்லியன் பெண்கள் வேலை இழக்கும் அபாயம் இந்த சட்டத்தால் உருவாகியுள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்பு மொத்த பணியாளர்களில் 36 சதவீதம் பெண்களாக இருந்த இந்தியாவில், 2016 கணக்கெடுப்புப்படி பெண் பணியாளர்கள் எண்ணிக்கை 24 சதவீதமாக சுருங்கியிருந்தது. இந்த சூழ்நிலையில், பெண்களின் பங்களிப்பை, புதிய சட்டம் மேலும் குறைத்துவிடும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.

பெரு நிறுவனங்களுக்கு ஓகே
விமானத்துறை, ஐடி துறை, ரியல் எஸ்டேட், கல்வி, இ-காமர்ஸ், உற்பத்தி, வங்கி, சுற்றுலா, சில்லரை வணிகம் மற்றும் நிதி சேவைகள் துறைகளை சேர்ந்த 300 ஊழியர்களிடம் இந்த சர்வே நடத்தப்பட்டது. பெரிய மற்றும் தொழில்முறை நிறுவனங்கள் புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், சிறு மற்றும் குறு நிறுவனங்கள், பெண்களை வேலைக்கு எடுக்க தயங்கும் சூழல் உருவாகியுள்ளது. பெண்களை பணிக்கு அமர்த்தி அவர்களுக்கு இத்தனை நீண்ட காலம் சம்பளத்துடன் பேறு கால விடுப்பு அளிப்பது உற்பத்தி திறனை பாதிப்பதோடு, செலவீனங்களை அதிகரிப்பதாகவும் அமைகிறது என கருதுகிறார்களாம்.

பிற நாடுகள்
"இதுபோன்ற சலுகைகள் அதிகரிக்கப்படும்போது, அதற்கு இழப்பீடாக வரி சலுகைகளை நிறுவனங்களுக்கு அரசு வழங்கும் நடைமுறை உலகின் பல பகுதிகளில் உள்ளது. ஆனால், இந்தியாவில் அது இல்லை" என்கிறார், இஎம்ஏ பார்ட்னர்ஸ் இன்டர்நேஷனல் நிறுவன மேலாண் பார்ட்னர் கே.சுதர்ஷன். சிறு மற்றும் குறு கம்பெனிகள் குறைந்த அளவுக்கான பணியாட்களை கொண்டு இயங்குபவை. மொத்தமே 5 ஊழியர்களை கொண்ட ஒரு நிறுவனத்தில், 2 பெண்கள் பேறுகாால விடுப்பு எடுத்தால், அந்த நிறுவனமே ஆடிப்போய்விடும் என்கிறார் அவர்.

மக்கள் தொகை அதிகம்
மக்கள் தொகை குறைந்த நாடுகளில் பணியாட்களுக்கான தேவை அதிகம். எனவே இதுபோன்ற சலுகைகளை அந்த நாடுகளில் வழங்கும்போது, பணியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. ஆனால், இந்தியா போன்ற மிகை மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில், குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்கள் கிடைக்கும் சூழலில், பெண் ஊழியர்களை தவிர்ப்பதை பல நிறுவனங்கள் விரும்பும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications