கோவிட் 19 நோயாளியின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு.. பெரும் பிரச்சினைக்கு பிறகு உடல் தகனம்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கோவிட் 19 பாதிப்பால் இறந்த முதல் நபரின் உடலை வாங்க யாரும் முன்வரவில்லை. இதையடுத்து 10 மணி நேர தாமதத்திற்கு பிறகு மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பர்கானா மாவட்டம் டம்டம்மை சேர்ந்த 57 வயது முதியவர் காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்பட்டு மார்ச் 20-ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேற்கு வங்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுள் இவர் 4ஆவது நபராவார். இவர் நேற்று மாலை 3.35 மணிக்கு பல்வேறு உறுப்புகள் செயலிழந்து மாரடைப்பு ஏற்பட்டு பலியானார்.

உலக சுகாதார நிறுவனம்
இவர் அண்மையில் வெளிநாடுகளுக்கு ஏதும் செல்லவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து இவரது குடும்ப உறுப்பினர்களும் அதே மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டனர். கோவிட் பாதித்த நபரின் உடலை தகனம் செய்ய சில வழிமுறைகளை உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ளது. எனவே இதை உறவினர்கள் கடைப்பிடிக்க மாட்டார்கள் என்பதால் அவரது உடலை மருத்துவமனை அதிகாரியின் மேற்பார்வையில் தகனம் செய்ய ஏற்பாடு செய்யயப்பட்டது.

கையெழுத்து
எனினும் அவரது உடலை தகனம் செய்ய குடும்ப உறுப்பினர்கள் ஒருவராவது கையெழுத்திட வேண்டும். எனினும் இவரது உறவினர்கள் அந்த விண்ணப்பத்தில் கையெழுத்திடுவதற்கு கூட மருத்துவமனைக்கு வர மறுத்துவிட்டனர். அந்த நபரின் மனைவியிடம் கையெழுத்து வாங்கலாம் என நினைத்தால் அவர் தற்போது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். எனினும் அவரிடம் இருந்து கையெழுத்து பெற்றனர்.

நுழையக் கூடாது
இதையடுத்து அரசு நடைமுறைகளின் படி மருத்துவமனை நிர்வாகம் அவரது உடலை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்தது. இதையடுத்து அந்த உடலை தகனம் செய்ய நிம்டலா சுடுகாட்டுக்கு கொண்டு சென்ற போது அங்கிருந்த உள்ளூர் மக்கள் அந்த உடல் தங்கள் பகுதியில் நுழையக் கூடாது என தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு மாவட்ட நிர்வாகத்தினருடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உடல் தகனம்
இதையடுத்து போலீஸார் தலையிட்டு இந்த பிரச்சினையை முடித்து வைத்தனர். ஒரு வழியாக நேற்று இரவு 9 மணிக்கு அவரது உடல் தகன மேடையில் வைக்கப்பட்டது. அப்படியும் பிரச்சினை முடிந்தபாடில்லை. இதையடுத்து டம்டம் பகுதியில் வசிக்கும் மக்கள் தனிமைப்படுத்தப்பட்ட உறவினர்களை அவர்களது பகுதியில் அனுமதிக்க மறுத்தனர். இதையடுத்து நேற்று நள்ளிரவு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications